News April 14, 2025
நீர் நிலைகளில் பத்திரமாக இருங்கள்

பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
Similar News
News November 27, 2025
இந்தியாவின் முதல் 7 சீட்டர் SUV EV: சிறப்பம்சங்கள் என்ன?

இந்தியாவில் 7 சீட்களை கொண்ட முதல் SUV EV காரை (XEV 9S) மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வேரியண்ட்களுக்கு ஏற்றவாறு 3 வகையான பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காரின் தொடக்கவிலை ₹19.95 லட்சமாகும் (ex-showroom). பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிக பேட்டரி திறன் கொண்ட வேரியண்ட் 0 -100 kph வேகத்தை 7 விநாடிகளில் அடையும். 20 நிமிடங்களில் 80% சார்ஜ் ஏறும் வசதியும் உள்ளது.
News November 27, 2025
புயல் அலர்ட்.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

புயல் எதிரொலியாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(நவ.28) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள <<18406009>>CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.<<>> அதி கனமழையால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விடுமுறை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வாய்ப்புள்ளது.
News November 27, 2025
BREAKING: இவர்கள் ஓட்டு போட முடியாது!

வரைவு வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இடம்பெறாது என்ற தகவலை ECI விளக்கியுள்ளது. டிச.4-ம் தேதிக்குள் SIR படிவத்தை ஒப்படைக்காத நபர்களின் பெயரும், 3 முறை வீட்டுக்கு சென்றும் படிவத்தை வழங்காதவர்களின் பெயரும் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்துள்ளது. அவர்கள் டிச.9 முதல் ஜன.8 வரை Form 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை கொடுத்து புதிதாக விண்ணப்பிக்கலாம். அதையும் தவறவிட்டால் ஓட்டு போட முடியாது.


