News April 14, 2025
நீர் நிலைகளில் பத்திரமாக இருங்கள்

பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
Similar News
News December 8, 2025
நாடாளுமன்றத்தில் இன்று சிறப்பு விவாதம்

தேசிய பாடலான வந்தேமாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. லோக்சபாவில் மதியம் 12 மணிக்கு விவாதத்தை தொடங்கி வைத்து PM மோடி உரையாற்ற உள்ளார். ராஜ்யசபாவில் அமித்ஷா விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த ‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு, கலாச்சார முக்கியத்துவம் குறித்து MP-க்கள் பேச உள்ளனர்.
News December 8, 2025
100 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 மொழிகளில் திருக்குறளை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 இந்திய மொழிகளிலும், 9 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாள்களில் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 8, 2025
World Roundup: பெத்தலேகத்தில் ஒளிர்ந்த கிறிஸ்துமஸ் மரம்

*தென்னாப்பிரிக்காவில் பாரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி. *2027-க்குள் UBS நிறுவனம் உலகம் முழுவதும் 10,000 பேரை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக தகவல். *காஸா விவகாரம் தொடர்பாக டிரம்புடன் இஸ்ரேல் PM பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல். *2 ஆண்டுகளுக்கு பிறகு பெத்தலேகத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம் ஒளிரூட்டப்பட்டுள்ளது. *அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை ரஷ்யா வரவேற்றுள்ளது.


