News April 14, 2025
நீர் நிலைகளில் பத்திரமாக இருங்கள்

பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டதால், மாணவர்கள் உணவுக்கு கூட வீட்டிற்கு வராமல் வெளியே சுற்றுவதுண்டு. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறுவர், சிறுமியர் நீர் நிலைகளில் குளித்து மகிழ செல்வார்கள். அவர்களை பத்திரமாக கவனித்துக் கொள்வது பெற்றோரின் கடமை. ஆபத்தை உணராமல் இருக்கும் சிறார்களுக்கு அதனை எடுத்துக் கூறி, கட்டுப்பாடுகளுடன் விளையாட அனுமதியுங்கள்.
Similar News
News December 7, 2025
அலர்ட்.. 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இரவுநேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க
News December 7, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 7, கார்த்திகை 21 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10.45 AM – 11:45 AM & 1.30 PM – 2.30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News December 7, 2025
ஷேக் ஹசினா எத்தனை நாள் இந்தியாவில் இருப்பார்?

ஷேக் ஹசினா விரும்பும் வரை இந்தியாவில் இருக்கலாம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சில குறிப்பிட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா வந்துள்ளார். அந்த காரணங்கள் சரியாகும் வரை இங்கு இருப்பது அல்லது திரும்பி செல்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதேவேளையில், வங்கதேசத்தின் ஜனநாயக அரசியல் செயல்முறைகளை இந்தியா ஆதரிப்பதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


