News March 18, 2025
மாநில அரசே வன்முறையை தூண்டுகிறது: ஓவைசி காட்டம்

மகாராஷ்டிராவில் அரசே வன்முறையை தூண்டுகிறது என AIMIM தலைவர் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் மற்றும் அம்மாநில அமைச்சர்கள் கொடுக்கும் அறிக்கைகள் & அவர்களது பேச்சுகளே வன்முறையை தூண்டும் வகையில் இருக்கின்றன என்றும், தங்களுடைய பொறுப்புகளை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறினார். நாக்பூர் வன்முறை, மகாராஷ்டிர அரசின் மிகப்பெரிய தோல்வி என்றும் ஓவைசி விமர்சித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
நவராத்திரியும் 9 தேவிகளும்

நாளைமுதல் நவராத்திரி விழா 9 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இந்த 9 நாள்களும், 9 தேவியை வழிபடுவார்கள். எந்த நாளில் எந்த தேவியை வழிபட வேண்டும் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்களும் உங்க வீட்டில் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி கொண்டாடுவீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 21, 2025
BREAKING: அக்.20-ல் அனைத்து பள்ளிகளுக்கும்.. உத்தரவு

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News September 21, 2025
GST குறைக்கவில்லையா? தமிழிலே புகாரளிக்கலாம்

2 வரம்புகளாக (5%, 18%) மாற்றப்பட்ட GST சீர்திருத்தங்கள், நாளை (செப்.22) முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், உரிய GST வரியை குறைக்காத நிறுவனங்கள் மீது புகாரளிக்க 1915 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ் உள்பட 17 மொழிகளில் புகார்களை அளிக்கலாம். <