News April 15, 2025
மாநில சுயாட்சியை ஏற்க முடியாது: நயினார்

மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற பிரிவினைவாதத்துடன் திமுக அரசு செயல்படுவதாக நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை எனவும், தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என CM ஸ்டாலின் நினைப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், மாநில சுயாட்சியை ஏற்க முடியாது எனவும், இந்தியா வல்லரசாக இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 14, 2025
RBI-யின் புதிய Digital money: பேமென்டுக்கு NO இண்டர்நெட்

இண்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் UPI பேமண்ட் செய்ய முடியாமல் பலர் தவிப்பதை பார்க்க முடியும். அவர்களுக்காகவே RBI புதிய வசதி ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதாவது ‘ஆஃப்லைன் டிஜிட்டல் ரூபாய்’ என்ற திட்டத்தின் மூலம் Digital money-ஐ நிஜமான பணத்தை போலவே பயன்படுத்தலாம். UPI ஸ்கேனர் மூலம் இந்த பணத்தை செலுத்தலாம். இண்டர்நெட் கிடைத்தவுடன் பணம் RBI கணக்கில் வரவு வைக்கப்படும். SHARE IT.
News October 14, 2025
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின்

ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் 3 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் சதீஷ் சிவா, ஹரிஹரன் ஆகியோருக்கு ஜாமின் வழங்கி மெட்ராஸ் HC உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மறைந்த ரவுடி நாகேந்திரனின் மரணத்தால், இறுதிச் சடங்குகள் செய்ய அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு 28-ம் தேதி வரை ஜாமின் தரப்பட்டுள்ளது.
News October 14, 2025
முகாம் நடத்த அரசு பள்ளிக்கு விடுமுறையா? அண்ணாமலை

அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து திமுக அரசுக்கு வருகிறது என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமுக்காக திருப்பத்தூரில் உள்ள முத்தூர் அரசு பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா எனவும் கடுமையாக சாடியுள்ளார்.