News August 10, 2024

துபாயில் மையத்தை தொடங்கிய StartUp TN

image

தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பை உருவாக்கித் தர பல்வேறு முயற்சிகளில் StartUp TN நிறுவனம் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக, துபாயில் முதல் வெளிநாட்டு StartUp மையத்தை அந்நாட்டு அரசுடன் இணைந்து தமிழக MSME தொழில்துறை தொடங்கியுள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து முதலீடுகளை ஈர்க்க விரும்பும் தமிழக நிறுவனங்கள் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

அமைச்சர் பேரவையிலும் பொய் சொல்கிறார்: EPS

image

தஞ்சை காட்டூரில் மட்டும் கொள்முதல் செய்யப்படாமல் 5,000 நெல் மூட்டைகள் சாலையில் கொட்டி, 20 நாள்களாக காத்திருப்பதாக EPS கூறியுள்ளார். ஆகஸ்ட்டிலேயே செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், அனுமதி கிடைக்கவில்லை என அமைச்சர் (சக்கரபாணி) பேரவையிலும் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டினார். நெல் கொள்முதலில் பழைய விலையே கொடுக்கப்படுவதால், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News October 22, 2025

இளையராஜா வழக்கில் Sony தாக்கல் செய்த விவரங்கள்

image

சோனி, ஓரியண்ட்டல், எகோ ரெக்கார்டிங் நிறுவனத்துக்கு எதிராக சென்னை HC-ல் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று வந்தபோது, இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்கள் சோனி நிறுவனம் தாக்கல் செய்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை நவ.19-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

News October 22, 2025

3 சிறப்பு ரயில்கள் ரத்து

image

குறைவான முன்பதிவு காரணமாக 3 சிறப்பு ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை இயங்க உள்ள சென்ட்ரல் – கோட்டயம் – சென்ட்ரல் ரயில் (Train No:06121/06122), அக்.24, 26 தேதிகளில் இயங்கவுள்ள செங்கல்பட்டு – நெல்லை – செங்கல்பட்டு ரயில் (Train No:06153/06154), அக்.28, 29 தேதிகளில் இயங்கவுள்ள நாகர்கோவில் – சென்ட்ரல் – நாகர்கோவில் (Train No:06054/06053) ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!