News March 27, 2025
இபிஎஸ்ஸூக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

இபிஎஸ்ஸூக்கு CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார். அண்மையில் இபிஎஸ் டெல்லி சென்றிருந்த நிலையில், பாஜக தலைவர்களிடம் இருமொழிக் கொள்கையை வலியுறுத்துமாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தப் பின் பேசிய இபிஎஸ் தமிழக பிரச்னைகள், இருமொழிக் கொள்கை விவகாரம் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். இதற்காக பேரவையில் இன்று CM ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Similar News
News November 16, 2025
இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 16, 2025
இரவில் விஜய் கட்சிக்கு வந்த அதிர்ச்சி

SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக தவெக அறிவித்து இருந்தது. இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பந்தல் அமைத்தனர். ஆனால், போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி, பந்தல் அமைக்க இல்லை என போலீசார் கூறியதால், பந்தல் அகற்றப்பட்டது. இதையடுத்து தவெக என்றாலே போலீசார் கெடுபிடி காட்டுவதாக தொண்டர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
News November 16, 2025
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.


