News August 15, 2024
SSLV-D3 ராக்கெட் கவுண்டவுன் இன்று தொடக்கம்

பூமி கண்காணிப்புக்கான EOS-08 செயற்கைக்கோள், SSLV-D3 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த EOS-08 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை காலை 9:17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட உள்ளது. இது பூமியில் இருந்து 475 கி.மீ உயரத்திலும் 37.4 டிகிரி சாய்விலும் நிலை நிறுத்தப்பட இருப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 25, 2025
இந்த நாள்களில் மிக மிக கவனம் மக்களே!

காரைக்கால், திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களுக்கு நவ.28-ல் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நவ.29-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கடலூருக்கு ஆரஞ்சு அலர்ட், டிச.1-ல் திருவள்ளூருக்கு மட்டும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, நவ.26, 27 ஆகிய 2 நாள்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது குறிபிடத்தக்கது.
News November 25, 2025
ராமர் கோயிலில் பிரம்மாண்ட கொடியேற்று விழா

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் இன்று கொடியேற்றும் விழா நடைபெற உள்ளது. PM மோடி இவ்விழாவில் பங்கேற்று, கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் காவிக் கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக் கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
News November 25, 2025
SIR மூலம் நீக்கப்பட்டவர்கள் வெளிநாட்டவர்களா? திருமா

SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 43 லட்சம் பேரும், ஏழை, தலித்துக்கள், இஸ்லாமியர்கள் என இந்நாட்டின் குடிமக்களே என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஏழைகளின் ஆயுதமான வாக்குரிமையை பறிக்கவே மத்திய பாஜக அரசு திட்டமிட்டு SIR-ஐ செயல்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


