News April 28, 2025

3 குழந்தைகளுக்கு தாயான ஸ்ரீலீலா…. குவியும் பாராட்டு

image

தெலுங்கில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் 2022-ல் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 3-வதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் தாய் உள்ளத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.

Similar News

News September 14, 2025

ராஜா கை வைத்தால் Wrong-ஆ போகாது: CM

image

இளையராஜாவின் பாராட்டு விழாவில் அவரிடம் CM ஸ்டாலின் கோரிக்கை ஒன்றை வைத்தார். சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு இளையராஜா இசையமைத்து ஆல்பமாக வெளியிட வேண்டும் என CM தெரிவித்துள்ளார். அதன்மூலம் தமிழ்ச்சுவை அடுத்த தலைமுறைக்கு பரிமாறப்பட வேண்டும் என்றும், ராஜா கை வைத்தால் அது Wrong-ஆ போவதில்லை என்பதால் கோரிக்கையை அவர் ஏற்க வேண்டும் எனவும் CM கூறினார்.

News September 14, 2025

மனம் கவர்ந்த ரிது வர்மா பிக்ஸ்

image

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தால் கவனம் ஈர்த்த ரிது வர்மா, தற்போது கண் கவர் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்திருக்கிறார். விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்திற்கு பிறகு இவர், தமிழ் படங்களில் கமிட் ஆகாததற்கு காரணம் தெரியவில்லை. மனதை கொள்ளையடித்துவிட்டால் போதுமா.. எப்போது நிரந்தரமாக குடியேற போகிறீர்கள் என ரசிகர்கள் கேட்கின்றனர்.

News September 14, 2025

கமலுக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு: ரஜினி

image

கமல்ஹாசனுக்கு மட்டும் சிறப்பு கவனிப்புடன் இளையராஜா பாடல்கள் அமைத்து கொடுத்தாக ரஜினி தெரிவித்துள்ளார். கமல், ரஜினி, விஜயகாந்த் என பலருக்கு ஒரே டைமில் இளையராஜா இசையமைத்துள்ளார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடல்கள் அமைத்து கொடுப்பதாக இளையராஜா சொல்வார், ஆனால் அதில் உண்மையில்லை என்று ரஜினி கூறியுள்ளார். ‘நாயகன்’ பட தென்பாண்டி சீமையிலே பாடலை அவர் பாடினால், அப்போதே ஆயிரம் பேர் அழுதுவிடுவீர்கள் என்றார்.

error: Content is protected !!