News May 11, 2024
செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்

இலங்கை அதிபர் தேர்தல் வரும் செப்.17 – அக்.16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பொருளாதர நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நாட்டை விட்டு வெளியேறிய ராஜபக்சே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ததால் ரணில் அதிபராக பொறுப்பேற்றார். அவரின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 20, 2025
பிரபல பாடகர் காலமானார்… குவியும் இரங்கல்

பிரபல பாலிவுட் பாடகரும் அசாமின் இசை ஐகானுமான ஜுபின் கார்க்(52) நேற்று விபத்தில் <<17761763>>மரணமடைந்தார்<<>>. இவரின் திடீர் மறைவு அதிர்ச்சியளிப்பதாக தன் இரங்கல் செய்தியில் PM மோடி குறிப்பிட்டுள்ளார். இணையற்ற திறமையாளரின் மறைவு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தியும், அசாம் தனக்கு பிடித்தமான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது என்று அம்மாநில CM ஹிமந்த பிஸ்வா சர்மாவும் தம் இரங்கல்களில் தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
மசூதி மீது ட்ரோன் தாக்குதல்: 75 பேர் துடிதுடித்து பலி!

சூடானில் மசூதி மீது RSF(துணை ராணுவம்) நடத்திய ட்ரோன் தாக்குதலில், 75 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மே 2023 முதல் சூடான் ராணுவத்திற்கும், Rapid Support Forces (RSF) அமைப்பிற்கும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. நாட்டின் ஜனாதிபதி ஓமர் அல்-பஷீரை பதவி நீக்கிய பிறகு, அதிகார பகிர்வு தோல்வியடைந்ததால், இரு அமைப்புக்கும் இடையே போர் வெடித்துள்ளது.
News September 20, 2025
உதயசூரியன், இரட்டை இலையால் பறிபோன கட்சிகள்

6 ஆண்டுகளாக தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை EC ரத்து செய்துள்ளது. திமுகவின் உதயசூரியன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளான ஈஸ்வரனின் கொமதேக, ஜவாஹிருல்லாவின் மமக, தமிமுன் அன்சாரியின் மஜக, ஜான்பாண்டியனின் தமமுக அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. இதனால், வரும் தேர்தலில் இவர்களின் நிலைபாடு என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.