News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 13, 2025
பிரபல நடிகர் கைது

பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தினேஷை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இளம்பெண்ணுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹3 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும், கொடுத்த பணத்தை கேட்டபோது தாக்குதல் நடத்தியதாகவும் இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், நெல்லையில் வைத்து தினேஷை கைது செய்த போலீஸ், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி

மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க SC அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கு எதிராக <<18274994>>தமிழ்நாடு<<>> கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது என்று SC தெரிவித்துள்ளது. அறிக்கை தயார் செய்த பின், TN அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் எனக்கூறியுள்ள SC, ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
News November 13, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 55 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி (DA), மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய செய்தியை SHARE செய்யுங்கள்.


