News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News October 18, 2025
தோனி, ரோஹித் டெஸ்ட் கேப்டன்சி சுமார் தான்: ரவி

MS தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறந்த கேப்டன்கள் என்பதில் சந்தேகமே இல்லை என்ற ரவி சாஸ்திரி, ஆனால் இருவரது டெஸ்ட் கேப்டன்சியும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளார். இருவருக்கும் சர்வதேச அளவில் ரசிகர்கள் உள்ளதாகவும் கூறினார். ரோஹித் தலைமையில் டெஸ்ட்டில் 12 வெற்றி, 9 தோல்விகளை இந்தியா பெற்றுள்ளது. தோனி கேப்டன்சியில் 27 வெற்றி, 18 தோல்வி, 15 டிராவை இந்தியா கண்டுள்ளது. உங்கள் கருத்து என்ன?
News October 18, 2025
பைசன் படத்தை தடை செய்ய வேண்டும்: ஹரி நாடார்

நேற்று ரிலீஸான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ், தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை தூண்டும் விதமாக படம் எடுப்பதாக ஹரி நாடாரின் சத்திரிய சான்றோர் படை கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என ஹரி நாடார் கோரிக்கை வைத்துள்ளார்.
News October 18, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. தமிழக அரசு அறிவிப்பு

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருள்கள் இம்மாதமே வழங்கப்பட உள்ளது. பருவமழை தொடங்கி இருப்பதால் முன்கூட்டியே வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில், இயந்திரக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பொருள்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து, தீபாவளி(அக்.20) முடிந்த பிறகு நவம்பருக்கான ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. SHARE IT