News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 16, 2025
பிரபலம் காலமானார்… கண்ணீர் மல்க இரங்கல்

114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத <<18284322>>திம்மக்கா<<>>வுக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையை சேவை செய்யவும், இயற்கையை காக்கவும் திம்மக்கா அர்ப்பணித்ததாகவும், அவர் நட்டு வளர்த்த மரங்கள் அவரை அம்மா என அழைக்கும் எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும், கர்நாடகாவில் போலீஸாக இருந்தபோது திம்மக்கா உடன் பழகிய நினைவுகள் தனது மனதில் நீடித்து நிற்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News November 16, 2025
BREAKING: இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 189 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 30 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா 153 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 124 ரன்கள் என்ற டார்கெட்டுடன் களமிறங்கிய இந்திய அணி 93 ரன்களிலேயே பரிதாபமாக ஆல் அவுட் ஆனது.
News November 16, 2025
வரலாறு காணாத விலை உயர்வு.. புதிய உச்சம்

முட்டை விலை 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று மொத்த கொள்முதல் விலையில் 5 காசுகள் உயர்ந்து ₹5.95-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ₹6.50 முதல் ₹7 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முட்டை ₹5.90-க்கு விற்பனையானதே உச்சமாக இருந்தது.


