News April 17, 2025
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
CINEMA 360°: ‘காந்தா’ படம் 5 நாட்களில் ₹29 கோடி வசூல்

*சசிகுமார் நடித்துள்ள “MY LORD” படத்தின் முதல் சிங்கிள் வெளியானது. *ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை நடிகர் அருண் விஜய் கொண்டாடினார். *நிவின் பாலி நடிக்கும் ‘சர்வம் மாயா’ டிசம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *லோகா வெற்றிக்கு பின் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் புதுப்படம் பூஜையுடன் தொடங்கியது. *துல்கரின் ’காந்தா’ படம் 5 நாள் முடிவில் ₹29 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
News November 20, 2025
சேலத்தில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறாரா விஜய்?

கரூர் அசம்பாவிதத்திற்கு பின் விஜய் தனது பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். தற்போது அவர் சேலத்தில் இருந்து தனது பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்ட வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த இடத்தில் பொதுக்கூட்டம், போலீஸ் அனுமதி உள்ளிட்ட பணிகள் குறித்து ஆலோசித்து விரைவில் விஜய் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 20, 2025
அன்புமணியின் பேச்சு குழந்தைத்தனமானது: TRB ராஜா

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய்சொல்வதாக அன்புமணி வைத்த குற்றச்சாட்டுக்கு TRB ராஜா பதில் அளித்துள்ளார். அதில் அனைத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ள மொத்த தொகையும், முதல் நாளிலேயே முதலீட்டாளர்களால் செலவிடப்படும் என நினைப்பது குழந்தைத்தனமானது என தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் தரவுகளின்படி, வேகமாக வளர்த்து வரும் மாநிலமாக TN அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


