News April 17, 2025

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

image

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

துபாய் ஏர் ஷோ.. அமெரிக்க கேப்டன் அதிருப்தி

image

தேஜஸ் விமான விபத்தில் நமன்ஷ் சியாலுக்கு உயிரிழந்த பிறகும் துபாய் ஏர் ஷோ தொடர்ந்தது குறித்து அமெரிக்க F-16 குழுவின் கேப்டன் டெய்லர் ஹிஸ்டர் அதிருப்தி தெரிவித்துள்ளார். நமன்ஷுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, தங்களது குழு இறுதி சாகசத்தை நிகழ்த்தாமல் வெளியேறியதாக அவர் பேசியுள்ளார். விபத்தை தொடர்ந்து, ஏர் ஷோ தொடரப்பட்டு அடுத்தடுத்த சாகசங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶நவம்பர் 24, கார்த்திகை 8 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:30 AM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: ரோகிணி ▶சிறப்பு: சதுர்த்தி, பதரி கவுரி விரதம். ▶வழிபாடு: சிவன் கோயிலில் சங்காபிஷேகம் தரிசித்தல்.

News November 24, 2025

பன்னாட்டு தலைவர்களுடன் PM மோடி சந்திப்பு

image

ஜி20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக கனடா, ஜப்பான், இத்தாலி நாடுகளின் PM-கள், பிரேசில், தெ.ஆப்பிரிக்காவின் அதிபர்கள் ஆகியோருடன் PM மோடி தனித்தனி சந்திப்பை நடத்தினார். அப்போது, உலக அமைதி, தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு, டிஜிட்டல் மேம்பாடு, காலநிலை மாற்றம், எல்லை பாதுகாப்பு, யுரேனியம் விநியோகம் உள்ளிட்ட பல ஒத்துழைப்புகள் குறித்து மோடி ஆலோசித்துள்ளார்.

error: Content is protected !!