News April 17, 2025

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள்

image

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மீனவர்களை தாக்கிவிட்டு ₹50,000 மதிப்புள்ள மீன்பிடி வலை உள்ளிட்ட பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த 4 மீனவர்கள் வேதாரண்யம் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News November 26, 2025

BREAKING: பாதி வழியிலேயே திரும்பினார் செங்கோட்டையன்

image

சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திலிருந்து காலை 8:30 மணிக்கு செங்கோட்டையன் புறப்பட்டார். இதைப்பார்த்த செய்தியாளர்கள், கேமராவுடன் அவரின் காரை பின்தொடர்ந்து சென்றனர். இதையறிந்த உடனே பாதி வழியிலேயே 8:45 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு காரை திருப்பினார். MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இன்றே விஜய்யை அவர் சந்திப்பார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 26, 2025

புதுச்சேரியிலும் கால் பதிக்கும் விஜய்.. டிச.5-ல் ரோடு ஷோ

image

புதுச்சேரியில் விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றாலும், புஸ்ஸி ஆனந்தின் சொந்த ஊரும் இதுதான். இதனால், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலிலும் விஜய் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், டிச.5-ம் தேதி காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை (தமிழ்நாடு எல்லை ஆரம்பத்தில் இருந்து புதுச்சேரி எல்லை முடிவு வரை) ரோடு ஷோ நடத்த விஜய் அனுமதி கேட்டுள்ளார்.

News November 26, 2025

FLASH: ஜெட் வேகத்தில் உயர்ந்த பங்குச்சந்தைகள்!

image

கடந்த 2 நாள்களாக சரிவிலிருந்த பங்குச்சந்தைகள் இன்று(நவ.26) வர்த்தகம் தொடங்கியது முதலே ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 666 புள்ளிகள் உயர்ந்து 85,253 புள்ளிகளிலும், நிஃப்டி 210 புள்ளிகள் உயர்ந்து 26,095 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. JSW Steel, Adani Ports, Trent, TMPV, Axis Bank நிறுவனங்களின் பங்குகள் 2 – 4% உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!