News March 24, 2025

தமிழக மீனவர்களை எச்சரித்து அனுப்பிய இலங்கை கடற்படை

image

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் 1 மணி நேரத்திற்கு பிறகு எச்சரித்து அனுப்பியுள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படையினர் வழக்குப் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் படகுடன் மீனவர்கள் நிம்மதியுடன் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படை மனம் மாறிவிட்டதா..!

Similar News

News July 10, 2025

இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

image

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.

News July 10, 2025

ஜூலை 10… வரலாற்றில் இன்று!

image

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.

News July 10, 2025

எலான் மஸ்க் நிறுவனத்துக்கு இந்தியா அனுமதி..!

image

இந்தியாவில் அதிவேக இணைய சேவை வழங்கும் வகையில் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு 5 ஆண்டுகள் அனுமதியை IN-SPACE மையம் வழங்கி உள்ளது. இதன் மூலம் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் 4408 முதல் தலைமுறை செயற்கை கோள்கள் இந்திய வான் எல்லை பகுதியில் செயல்பட தொடங்கும் என்றும், இதனால் 600 Gbps வேகத்தில் இணைய சேவை பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!