News November 20, 2024
தமிழக மீனவர்களுக்கு எதிராக திரும்பிய இலங்கை

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் படகுகளை கடற்படை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் முதற்கட்டமாக இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரசின் முடிவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இது தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Similar News
News August 14, 2025
₹3,000 டோல்கேட் FAStag பாஸ் நாளை அமலுக்கு வருகிறது

நாடு முழுவதும் ஆண்டுக்கு ₹3,000 செலுத்தி பயணம் செய்யும் FAStag திட்டம் நாளை அமலுக்கு வருகிறது. இதன் மூலம் வணிக நோக்கமற்ற கார், ஜீப், வேன்கள் நாடு முழுவதும் 200 முறை டோல்கேட்களில் கட்டணமின்றி செய்ய முடியும். Rajmarg Yatra செயலியில் PASS வழங்கும் பணி தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண், வாகன பதிவு எண், பாஸ்டேக் ஐடி உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
News August 14, 2025
ஆசிய கோப்பை: கில்லை ஓரங்கட்டும் கம்பீர்?

ஆசிய கோப்பைக்கான அணியில் கில்லை சேர்ப்பதில் கம்பீர் தயக்கம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20-களில் கில் கன்சிஸ்டன்சியுடன் விளையாடினாலும், பவர்பிளேயில் அதிரடியாக விளையாடாதது ஒரு விமர்சனமாக உள்ளது. ஆனால் சாம்சன், அபிஷேக் ஷர்மா 40 பந்துகள் ஆடினாலே ஆட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்பதால், கில்லுக்கு பதில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்க கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
News August 14, 2025
பெண்கள் எப்போதும் வளைந்து கொடுக்க கூடாது: ஸ்வாசிகா

15 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் தனக்கு, இதுவரை பாலியல் தொந்தரவு இருந்ததில்லை என நடிகை ஸ்வாசிகா தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் இந்த பிரச்னை இருப்பதாகவும், பெண்கள் தைரியத்துடன் எந்த ஒரு இடத்திலும் வளைந்து செல்லக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஒருவர் தவறாக நடக்க முயன்றால் அவர்களை எதிர்கொள்ளவும், சமூகத்தின் முன் நிறுத்தவும் தயங்க கூடாது என்றும் கூறியுள்ளார்.