News August 8, 2024

சதமே இல்லாத இலங்கைத் தொடர் !

image

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டி20, ODI தொடர்களில் இரு அணி வீரர்களும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டி20 போட்டித் தொடரில் இலங்கை வீரர் நிசாங்கா அதிகபட்சமாக முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் 58 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் தொடரில், 3ஆவது போட்டியில் அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களும், 2வது போட்டியில் ரோஹித் 64 ரன்களும் எடுத்தனர்.

Similar News

News September 18, 2025

யார் இந்த மருது அழகுராஜ்?

image

1998-ல் அதிமுகவில் இணைந்து 2004 வரை பயணித்தார். பின்னர் தேமுதிகவில் இணைந்த அவர், 2009-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார். ‘நமது எம்ஜிஆர்’ என்ற அதிமுக நாளிதழ், EPS-OPS ஆல் உருவாக்கப்பட்ட ‘நமது அம்மா’ நாளிதழின் ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், OPS-ன் தீவிர ஆதரவாளராக மாறினார். ஜெ.,வின் பல அரசியல் உரைகளையும் எழுதியுள்ளார். திருப்பத்தூரில் தேமுதிக (2006), அதிமுக (2021) சார்பில் போட்டியிட்டிருந்தார்.

News September 18, 2025

பிரான்ஸில் போராட்டம்: குவியும் 8 லட்சம் பேர்

image

பிரான்ஸில் ஆசிரியர்கள், ரயில் டிரைவர்கள், மருந்தாளுநர்கள், ஹாஸ்பிடல் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்ட போராட்டத்தில் தற்போது மாணவர்களும் இணைந்துள்ளனர். சிக்கன நடவடிக்கையை நிறுத்தி நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும், பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்று கோரி நடக்கும் போராட்டத்தில் 8 லட்சம் பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. போராட்டத்தை தடுக்க 80,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

News September 18, 2025

₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

image

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.

error: Content is protected !!