News August 8, 2024
சதமே இல்லாத இலங்கைத் தொடர் !

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டி20, ODI தொடர்களில் இரு அணி வீரர்களும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டி20 போட்டித் தொடரில் இலங்கை வீரர் நிசாங்கா அதிகபட்சமாக முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் 58 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் தொடரில், 3ஆவது போட்டியில் அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களும், 2வது போட்டியில் ரோஹித் 64 ரன்களும் எடுத்தனர்.
Similar News
News December 5, 2025
Business 360°: டீசல் பயன்பாடு பன்மடங்கு அதிகரிப்பு

*கடந்த ஏப். முதல் அக். வரை ₹329 கோடிக்கு சீனாவுக்கு இந்தியாவில் இருந்து தேயிலை ஏற்றுமதியாகியுள்ளது *2025-26 நிதியாண்டின் இறுதியில் இந்தியாவின் GDP 7.4% ஆக உயரும் என அமெரிக்க நிறுவனம் கணிப்பு *கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு, நவம்பரில் 85.5 லட்சம் டன் டீசல் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது *இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை சமநிலைப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என பியூஸ் கோயல் உறுதி
News December 5, 2025
Sports 360°: டேக்வாண்டோவில் இந்தியாவுக்கு வெண்கலம்

*SUPER CUP கால்பந்து இறுதிப்போட்டிக்கு எப்.சி.கோவா, ஈஸ்ட் பெங்கால் எப்.சி அணிகள் முன்னேற்றம் * ILT20-ல் MI எமிரேட்ஸை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது *U-21 டேக்வாண்டோ உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் சிங் பிஸ்ட் வெண்கலம் வென்றார் *HCL ஸ்குவாஷ் தொடரின் ஃபைனலில் அனாஹத் சிங்-ஜோஷ்னா சின்னப்பா மோதல் *டி20 போட்டிகளில் சுனில் நரேன் 600-வது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்
News December 5, 2025
BREAKING: செங்கோட்டையனின் அடுத்த சம்பவம்

புதுச்சேரியில் டிச.9-ல் பொதுக்கூட்டம் நடத்த தவெக அனுமதி கோரியுள்ள நிலையில், சென்னையில் உள்ள WAR ROOM-ல் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை நடத்தினார். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இனி பொதுக்கூட்டமாகவே பரப்புரையை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திமுக, அதிமுக முக்கிய புள்ளிகள் சிலரை தவெகவில் இணைப்பது குறித்தும் செங்கோட்டையன் ஆலோசித்துள்ளார்.


