News August 8, 2024
சதமே இல்லாத இலங்கைத் தொடர் !

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டி20, ODI தொடர்களில் இரு அணி வீரர்களும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டி20 போட்டித் தொடரில் இலங்கை வீரர் நிசாங்கா அதிகபட்சமாக முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் 58 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் தொடரில், 3ஆவது போட்டியில் அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களும், 2வது போட்டியில் ரோஹித் 64 ரன்களும் எடுத்தனர்.
Similar News
News October 30, 2025
கம்பேக் கொடுப்பாரா சூர்யா?

சரிந்து கிடக்கும் மார்கெட்டை மீண்டும் உயர்த்தும் வேலையில் சூர்யா இறங்கியுள்ளார். தற்போது இந்திய சினிமாவில் சாமி- கமர்சியல் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அந்த லைனில்தான் ‘கருப்பு’ தயாராகியுள்ளது. அதை தொடர்ந்து, பான் இந்திய அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு இயக்குநர் ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி, மலையாள இயக்குநர் ‘ஆவேசம்’ ஜீத்து மாதவன் ஆகியோருடனும் கை கோர்க்கிறார். கம்பேக் கொடுப்பாரா சூர்யா?
News October 30, 2025
வரலாற்றில் முதல் இந்திய பெண்.. புனே பெண் சாதனை!

சர்வதேச மோட்டார்ஷிப் சாம்பியன்ஷிப்பில் Ferrari காரை ஓட்டும் முதல் இந்திய பெண் என்ற பெருமையை புனேவை சேர்ந்த டயானா பூண்டோல்(32) நவம்பர் 2025 முதல் ஜனவரி 2026 வரை Middle East-ல் நடைபெறும் Ferrari Club Challenge தொடரில் அவர் பங்கேற்கிறார். Ex- ஸ்கூல் டீச்சரான டயானா, 2024-ல் the MRF Saloon Cars Championship தொடரில், நாட்டின் முன்னணி ஆண் ரேஸர்களை தோற்கடித்து பட்டம் வென்றிருந்தார்.
News October 30, 2025
33 நாள்களாக நெல் கொள்முதல் இல்லை: அன்புமணி

நெல் கொள்முதல் குறித்து அரசு பதிலளித்தாலும், எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்நிலையில், வட மாவட்டங்களில் 33 நாள்களாக நெல் கொள்முதல் நடைபெறவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கொள்முதல் சிறப்பாக நடைபெறுவதாக பேசும் CM-க்கு, இதுபற்றி தெரியவில்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வட மாவட்டங்கள் வேறு பகுதியில் இருப்பதாக CM நினைக்கிறார் போல என்றும் விமர்சித்துள்ளார்.


