News August 8, 2024
சதமே இல்லாத இலங்கைத் தொடர் !

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான டி20, ODI தொடர்களில் இரு அணி வீரர்களும் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. டி20 போட்டித் தொடரில் இலங்கை வீரர் நிசாங்கா அதிகபட்சமாக முதல் போட்டியில் 79 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் சூர்யகுமார் 58 ரன்கள் சேர்த்தார். ஒருநாள் தொடரில், 3ஆவது போட்டியில் அதிகபட்சமாக இலங்கை வீரர் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களும், 2வது போட்டியில் ரோஹித் 64 ரன்களும் எடுத்தனர்.
Similar News
News November 13, 2025
பிரபல நடிகர் கைது

பிரபல சீரியல் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தினேஷை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இளம்பெண்ணுக்கு மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ₹3 லட்சம் பெற்று மோசடி செய்ததாகவும், கொடுத்த பணத்தை கேட்டபோது தாக்குதல் நடத்தியதாகவும் இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், நெல்லையில் வைத்து தினேஷை கைது செய்த போலீஸ், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 13, 2025
மேகதாது அணை: திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி

மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க SC அனுமதி அளித்துள்ளது. அனுமதிக்கு எதிராக <<18274994>>தமிழ்நாடு<<>> கூறும் அம்சங்கள் அனைத்தும் மிகவும் ஆரம்ப கட்டமானது என்று SC தெரிவித்துள்ளது. அறிக்கை தயார் செய்த பின், TN அரசு, காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகியவற்றிடம் கருத்து கேட்ட பிறகே முடிவெடுக்க வேண்டும் எனக்கூறியுள்ள SC, ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் முழுமையாக கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.
News November 13, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்ந்தது

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். 55 சதவிகிதமாக உள்ள அகவிலைப்படி (DA), மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தற்போது 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது. இந்த முக்கிய செய்தியை SHARE செய்யுங்கள்.


