News October 9, 2025
இலங்கை கடற்படை அட்டூழியம்: ஸ்டாலின் கடிதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News October 9, 2025
தினமும் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஒவ்வொரு பழத்திலும், பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன. என்னென்ன பழங்களில் என்ன நன்மைகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாமல் வேறு ஏதேனும், சத்து நிறைந்த பழம், உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News October 9, 2025
கைரேகை மூலம் UPI.. எப்படி செய்வது?

இனிமேல் UPI கட்டணங்களை PIN உள்ளீடு இல்லாமல், கைரேகை (Fingerprint) (அ) முக அடையாளம் (Face ID) மூலம் மட்டுமே பணம் செலுத்தும்முறை படிப்படியாக அமலுக்கு வரும். இதற்கு, முதலில், UPI செயலியை (PhonePe, GPay, Paytm) அப்டேட் செய்யவும். செயலியின் Settings-ல் சென்று பயோமெட்ரிக் அங்கீகாரம் (Biometric Authentication) அம்சத்தை இயக்கவும். பின்னர், அதை உங்கள் ஸ்மார்ட்போனின் பயோமெட்ரிக் உடன் இணைக்கவும். SHARE IT.
News October 9, 2025
AP ஃபார்முலாவில் கூட்டணி ஆட்சி: கார்த்தி சிதம்பரம்

ஆட்சியில் காங்., பங்கு கேட்பதில் தவறில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகார லட்சியம் இல்லாவிட்டால், காங்., ஏன் அரசியல் கட்சியாக இருக்க வேண்டும் என கேள்வியெழுப்பினார். AP-யில் சந்திரபாபுவுக்கு மெஜாரிட்டி இருந்தும், கூட்டணி ஆட்சி நடத்துகிறார், ஆனால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி நடத்தியும், காங்கிரஸுக்கு பங்கு தரவில்லை என்றார். அவரது கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?