News March 21, 2025
நடிப்புத் தொழிலில் இருந்து ஸ்ரீ கோபிகா விலகல்

நடிப்புத் தொழிலில் இருந்து முழுவதும் விலகுவதாக புகழ்பெற்ற சின்னத்திரை நடிகை ஸ்ரீ கோபிகா அறிவித்துள்ளார். சன்டிவியில் வெளியான ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ கோபிகா. இதையடுத்து, சூர்யா டிவியில் ‘மாங்கல்யம் தந்நுனானே’ சீரியலில் நடித்து வந்தார். இந்நிலையில், அந்த சீரியலில் இருந்தும், நடிப்புத் தொழிலில் இருந்தும் விலகுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ரீ கோபிகா பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 28, 2025
BREAKING: நிலநடுக்கத்தால் பாங்காக்கில் அவசரநிலை

நிலநடுக்கத்தால் தாய்லாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாங்காக்கில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதனால், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
News March 28, 2025
வீட்டில் இதையா யூஸ் பண்றீங்க?

காய்கறிகள் நறுக்க பலரும் பிளாஸ்டிக் கட்டிங் போர்டு பயன்படுத்துகின்றனர். ஆனால், இது நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். காய்கறிகளை நறுக்கும்போது, கத்திமுனை பட்டு போர்டு சேதமடைவதுடன், அப்போது உதிரும் பிளாஸ்டிக் துணுக்குகள் உணவில் கலக்கின்றன. மேலும், போர்டில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அதுவும் நோய்களை உண்டாக்குகிறது. இதனால் ஹார்மோன் பாதிப்பு, உடல்பருமன், கேன்சர் வரும் ஆபத்து அதிகரிக்கிறது.
News March 28, 2025
1 – 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?

வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தப் பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார். 1 – 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.