News May 16, 2024
ப்ளே ஆஃப் சுற்றுக்கு SRH அணி முன்னேறாது!

நடப்பு ஐபிஎல் தொடரில் SRH அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “SRH அணி அடுத்த 2 போட்டிகளில், தோற்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். KKR, CSK, RCB, RR ஆகிய 4 அணிகள் ப்ளே ஆஃப்க்கு முன்னேறலாம்” என்றார். இந்த சர்ச்சைக் கருத்தால் சீற்றமடைந்த SRH அணியின் ரசிகர்கள் கடும் சொற்களால் அவரை அர்ச்சித்து வருகின்றனர்.
Similar News
News November 24, 2025
மகளிர் கபடி அணிக்கு PM மோடி வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பை கபடியில் சாம்பியன் பட்டம் வென்ற <<18376835>>இந்திய அணியை<<>> PM மோடி வாழ்த்தியுள்ளார். இந்த வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாக அவர் X-ல் பதிவிட்டுள்ளார். மகளிர் அணியின் வெற்றியானது, எண்ணற்ற இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரிய அளவில் கனவு காண்பதற்கு ஊக்குவிக்கும் என்றும் PM மோடி கூறியுள்ளார். தொடர் முழுக்க இந்திய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
பவாரியா கொள்ளையர்கள் வழக்கு கடந்து வந்த பாதை (1/2)

கும்மிடிப்பூண்டி MLA-வாக இருந்த சுதர்சனத்தின் வீட்டில் 2005 ஜன.9 அன்று நள்ளிரவில் புகுந்த பவாரியா கும்பல், அவரை கொலை செய்துவிட்டு 65 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதையடுத்து இந்த கும்பலைச் சுட்டுப்பிடிக்க அப்போதைய CM ஜெயலலிதா ஐஜி ஜாங்கிட் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்தார். அவர்கள் ஹரியானாவை சேர்ந்த ஓம் பிரகாஷ், ஜெகதீஷ், ராகேஷ், அசோக், 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.
News November 24, 2025
20 ஆண்டுகளுக்கு பிறகு அதிரடி தீர்ப்பு (2/2)

தமிழகத்தை உலுக்கிய இந்த கொலை வழக்கில் ஓம் பிரகாஷ் உள்ளிட்ட 2 பேர் சிறையிலேயே இறந்துவிட்டனர். ஜாமினில் விடுதலையான 3 பெண்கள் தலைமறைவாகினர். 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் பிறகு ஒருவரை விடுதலை செய்த கோர்ட் 3 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவத்தை தழுவியே கார்த்தி நடிப்பில் 2017-ல் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


