News May 16, 2024
ப்ளே ஆஃப் சுற்றுக்கு SRH அணி முன்னேறாது!

நடப்பு ஐபிஎல் தொடரில் SRH அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “SRH அணி அடுத்த 2 போட்டிகளில், தோற்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். KKR, CSK, RCB, RR ஆகிய 4 அணிகள் ப்ளே ஆஃப்க்கு முன்னேறலாம்” என்றார். இந்த சர்ச்சைக் கருத்தால் சீற்றமடைந்த SRH அணியின் ரசிகர்கள் கடும் சொற்களால் அவரை அர்ச்சித்து வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.04) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளகிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டமில், மணியகாரம்பாளையம், உடையாம்பாளையம், கணபதி புதூர், வெள்ளகிணர் ஹவுசிங் யூனிட், செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், கங்கேயம்பாளையம், மதியழகன் நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 3, 2025
10th Pass போதும், ₹56,900 சம்பளத்தில் அரசு வேலை!

Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் 362 Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹18,000 முதல் ₹56,900 வரை தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு: 25 வயது. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: <
News December 3, 2025
‘2 திமுக அமைச்சர்கள் தவெகவில் இணைகிறார்கள்’

செங்கோட்டையனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தவெகவில் இணையவிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ, அங்கே அரசியல் தலைவர்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில், திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், பிப்ரவரிக்குள் தவெகவில் இணைவார்கள் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், டெல்டா மண்டலத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.


