News June 6, 2024
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
Similar News
News March 22, 2026
வரலாற்றில் இன்று

➤2020 – கோவிட் காரணமாக 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவிடப்பட்டது.
➤1955 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி பிறந்த தினம்.
➤2005 – நடிகர் ஜெமினி கணேசன் மறைந்த நாள்.
➤2020 – நடிகர், இயக்குநர், கதாசிரியர் & தயாரிப்பாளர் விசு மறைந்த நாள்.
➤உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
News March 22, 2026
நடுரோட்டில் பற்றி எரிந்த அரசு பஸ்

தூத்துக்குடியில் இருந்து நெல்லை சென்ற அரசு பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவத்தில், சுதாரித்த 60 பயணிகளும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 22, 2026
சிக்கிமில் லேசான நிலநடுக்கம்

சிக்கிமில் மங்கன் பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.46 மணியளவில் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையில் ஏற்கெனவே பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


