News April 11, 2025
மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: வருந்திய துரைமுருகன்

மாற்றுத்திறனாளிகள் <<16019356>>குறித்த பேச்சுக்கு<<>> அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக துரைமுருகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்காக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொன்முடியை தொடர்ந்து தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News December 14, 2025
பாடகர் ஜூபின் கொலை.. யார் யாருக்கு தொடர்பு?

பிரபல <<17769687>>பாடகர் ஜூபின் கார்க்<<>> கொலை வழக்கில் 4 பேர் மீது SIT குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது பாதுகாப்பு பிரிவில் இருந்த நந்தேஷ்வர் போரா, பிரபின் பைஷ்யா ஆகியோரும் அதில் இடம் பெற்றுள்ளனர். வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடித்த SIT அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அசாம் மாநில CM ஹிமந்தா பிஸ்வா சர்மா விரைவில் ஜூபின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
News December 14, 2025
இந்த பரிகாரத்தை திமுக செய்யணும்: அன்புமணி

கல்வி கற்க வேண்டிய வயதில் மதுவால் மாணவர்கள் சீரழிவது, வலியை தருவதாக அன்புமணி தெரிவித்துள்ளார். <<18550757>>பாளையங்கோட்டை சம்பவத்தை<<>> சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவிகளுக்கு மது விற்பனை செய்த, வாங்கிக் கொடுத்தவர்கள் மீது எடுக்கப்படவுள்ள நடவடிக்கை பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். இளம் தலைமுறையை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்காக, மதுக்கடைகளை முற்றிலும் மூடி DMK பரிகாரம் செய்ய வேண்டும் என X-ல் அவர் பதிவிட்டுள்ளார்.
News December 14, 2025
BREAKING: இனி இவர்களுக்கும் ₹1000.. அறிவித்தார் ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கூடுதலாக 17 லட்சம் பெண்களுக்கு ₹1000 வழங்கப்பட்டது. ஆனால் விண்ணப்பித்தும் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. இது சர்ச்சையான நிலையில், விடுபட்ட தகுதியுடைய குடும்ப தலைவிகள் கோரிக்கை விடுத்தால், அவர்களுக்கும் ₹1000 வழங்கப்படும் என்று CM ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார்.


