News August 9, 2024
சென்னையில் இருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்

கூட்ட நெரிசலைப்போக்க, சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இன்று (09.08.2024) இரவு 11 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், பண்ருட்டி, சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர் வழியாக நாளை காலை 6.40 மணிக்கு திருச்சி சென்றடையும். மீண்டும், 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
Similar News
News November 12, 2025
டெல்லி கார் வெடிப்பு: அறிக்கை வெளியானது

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், உயிரிழந்தவர்களின் நுரையீரல், குடல் உள்ளிட்ட உறுப்புகள் கார் வெடிப்பால் சிதைந்துள்ளன. மேலும், சிலரது உடல்களிலிருந்து சில உலோகத் துண்டுகளும் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரிழந்தவர்கள் வெடிப்பின் காரணமாக கடுமையான வலி மற்றும் வேதனையை அனுபவித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
News November 12, 2025
BREAKING: தமிழக அரசு அறிவிப்பு

மழைக்காலங்களில் கூடுதல் மின்வாரிய பணியாளர்களை பணியில் அமர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், அதிக பாதிப்பு ஏற்படும் வட்டங்களில் ஒரு பிரிவுக்கு 4 பேரை பணியமர்த்தவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், தற்செயல் விடுப்பில் உள்ள பணியாளர்கள் விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 12, 2025
நீங்களும் இப்படி ஏமாறலாம்.. உஷார் மக்களே!

டெக்னாலஜி வளர, வளர மோசடிகளும் அதிகரித்து கொண்டே போகின்றன. இது புது ரகம். உங்கள் நண்பரின் நண்பர் என ஒருவர் போன் செய்து பேசுவார். அப்போது 2nd call வரும். அது உங்கள் நண்பரின் அழைப்புதான், Attend செய்து, Call Merge செய்ய சொல்கின்றனர். அதை செய்தால், உங்கள் போனின் மொத்த கட்டுப்பாடும் அவர்களிடம் சென்று விடுகிறது. ஈசியாக, வங்கியின் OTP அழைப்பை, தெரிந்து கொண்டு மொத்த பணத்தையும் சுருட்டி விடுகின்றனர்.


