News April 7, 2025
மீனவர்களுக்கு ₹576 கோடியில் சிறப்புத் திட்டங்கள்: CM

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் மீனவர்கள் நலனுக்காக ₹576 கோடியில் சிறப்பு திட்டங்களை CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். தங்கச்சிமடத்தில் ₹150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், 7,000 மீனவர்களுக்கு உபகரணங்களுடன் பயிற்சி வழங்க ₹52 கோடி ஒதுக்கீடு செய்யப்படும், 14,700 பேருக்கு மீன்பிடி சாராத தொழில்களுக்கு பயிற்சி அளிக்க ₹53 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என CM உறுதியளித்தார்.
Similar News
News April 10, 2025
ராணா கனடா நாட்டுக்காரர்.. பாகிஸ்தான் பல்டி

தஹாவூர் <<16053272>>ராணா <<>>தங்கள் நாட்டுக்காரர் இல்லை, கனடா நாட்டுக்காரர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப்பில் பிறந்தவர் ராணா. பிறகு கனடாவில் குடியேறி, அங்கிருந்து அமெரிக்கா சென்று டேவிட் ஹெட்லியுடன் சேர்ந்து மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டது விசாரணையில் ஏற்கெனவே உறுதியானது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ராணா கனடா நாட்டு பிரஜை எனத் தெரிவித்துள்ளது.
News April 10, 2025
78,800 வரை சம்பளம்: மத்திய அரசில் 558 காலியிடங்கள்!

ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) 558 ஸ்பெஷலிஸ்ட் கிரேட் II பதவிகளுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, சம்மந்தப்பட்ட மருத்துவ துறையில் முதுகலை டிகிரி முடித்து, 5 வருட அனுபவத்துடன் 45 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும். மாதம் ₹67,000 – ₹78,800 வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <
News April 10, 2025
உங்களுக்கு குபுகுபுனு வியர்த்து ஊத்துதா?

சம்மர் சீசனின் பெரிய பிரச்னையான வியர்வையில் சில நன்மைகளும் உள்ளது: தோலில் இருந்து வியர்வை சுரப்பதால், உடலின் வெப்பநிலை குறைகிறது *அதிகப்படியான வியர்வை சருமத்தை பளபளப்பாக்கும். கூடுதலாக சருமத்தின் செல்களுக்கு ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்*கடினமான உழைப்பால் தான், அதிகப்படியான வியர்வை வெளியேறும். அது இதயத்திற்கு நல்லதே. ஆனால், எப்போது, எவ்வளவு வியர்க்கிறது என்பதில் கவனம் வேண்டும்.