News March 17, 2024

மணிப்பூர் முகாமில் உள்ளவர்களுக்கு சிறப்பு வசதி

image

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வசிக்கும் மக்களும், வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் புலம்பெயர்ந்தோருக்கு உள்ள திட்டத்தை போல மணிப்பூரிலும் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர், வாக்குச் சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

Similar News

News December 2, 2025

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றும் பாஜக: CPIM

image

ரவிக்குமார் என்பவர் தொடுத்த வழக்கில், இந்தாண்டு முதல் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்று மதுரை HC அமர்வு தீர்ப்பளித்தது. இந்த இடம் சிக்கந்தர் மலைக்கு மிக அருகில் உள்ளது என்றும், கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றும் BJP-ன் முயற்சி எனவும் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடரவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

News December 2, 2025

இம்ரான் உயிருடன் இருப்பதை உறுதி செய்த சகோதரி

image

சிறையில் உள்ள பாகிஸ்தான் Ex. PM இம்ரான்கான் கொல்லப்பட்டதாக சந்தேகித்து அந்நாட்டில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில், இம்ரான்கானை அவரது சகோதரி உஸ்மா நேரில் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை இன்று சந்தித்து 20 நிமிடங்கள் உஸ்மா பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இம்ரான் உயிருடன் இருக்கிறார், ஆனால் மனதளவில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

News December 2, 2025

டெல்லி விரைந்த OPS… புதுக்கட்சி தொடக்கமா?

image

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க EPS-க்கு 15-ம் தேதி வரை OPS கெடு விதித்திருந்தார். இதனிடையே அவர் தனிக்கட்சி தொடங்குவாரா அல்லது தவெகவுடன் இணைவாரா என்ற கேள்விகள் எழுந்தது. இந்நிலையில் டெல்லிக்கு இன்று OPS அவசர பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதுவரை பாஜக தலைவர்களை சந்திக்க அவர் நேரம் எதுவும் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் புதிய கட்சியை பதிவு செய்யவே டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!