News May 23, 2024
+2வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

+2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த SC, ST பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் துணைத் தேர்வு எழுத உதவும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலப் பள்ளி மாணவர்கள் 100% உயர்கல்வியில் சேரும் வகையில் இந்நடவடிக்கையை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்க உதவுமாறு ஆசிரியர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News March 10, 2026
துடிக்க துடிக்க கொலை செய்த இளம் நடிகை.. PHOTO

விழுப்புரத்தில் குறும்பட இயக்குநர் ஜெயக்குமார் என்பவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம் நடிகை பூஜா தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து, ஜெயக்குமாரை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பூஜா மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 10, 2026
349 பணியிடங்கள், ₹57,000 சம்பளம்.. Apply பண்ணுங்க

மத்திய ஆயுத காவல் படையில் 349 உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு <
News March 10, 2026
தொகுதிப் பங்கீடு .. EPS-ஐ சந்திக்கும் பியூஷ் கோயல்

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று திருச்சி வருகிறார். திருச்சியில் நாளை நடைபெறவிருக்கும் NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய வரும் பியூஷ் கோயல், இன்றிரவு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பின், நாளை தொகுதிப் பங்கீடு தொடர்பாக EPS-ஐ சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


