News May 17, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News April 9, 2026

இதுமட்டும்தான் கோர்ட்டுக்கு வேலையா? நீதிபதிகள்

image

திருப்பரங்குன்றத்தில் இருமதத்தினருக்கான கட்டுப்பாடுகளில் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக கூறி KK ரமேஷ் என்பவர் HC மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், தி.குன்றம் வழக்குகளை விசாரிப்பது மட்டுமே HC-ன் வேலையா என கேள்வி எழுப்பினர். இதுபோன்று முகாந்திரம் இல்லாமல் வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு ₹50,000 அபராதம் விதித்து, மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

News April 9, 2026

தேர்தலில் வாக்குகளை பிரிக்கப் போவது யார்?

image

2021 தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால், 200 தொகுதிகளின் முடிவுகள் 3-ம் அணியை பொறுத்து மாறுமாம். அதாவது அதிமுக, திமுக கூட்டணிகள் தவிர, பிறகட்சிகள் பெறும் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும். உதாரணத்துக்கு 2021-ல் 83 தொகுதிகளில் நாதக பெற்ற வாக்குகள், அத்தொகுதிகளின் வெற்றி வித்தியாசத்தைவிட அதிகம். இம்முறை தவெகவும் களத்தில் இறங்கியுள்ள நிலையில், 2026 தேர்தல் முடிவு யாருக்கு சாதகமாக இருக்கும்?

News April 9, 2026

நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு.. மக்களுக்கு ஏமாற்றம்

image

திமுக, அதிமுக, பாமக, அமமுக, <<19607806>>காங்கிரஸ்<<>> என பல முன்னணிக் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை எந்த கட்சியும் வாக்குறுதியாக அளிக்கவில்லை. இதனால், தேர்தலையொட்டி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 2021-ல் 5 சவரன் வரையிலான நகைக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!