News May 17, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 28, 2025

ஒரேநாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பம்!

image

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, TN-ல் நேற்று ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 நாள்களில் மட்டும் 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை தெரிவித்து 4,741 பேர் மனு அளித்துள்ளனர். SIR-க்கு பிறகு 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பெயர்களை சேர்க்க 4 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

News December 28, 2025

மீண்டும் அணிக்கு திரும்பும் ஸ்ரேயஸ்

image

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த <<18347826>>ஸ்ரேயஸ்<<>>, மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பூரண குணமடைந்துவிட்டதாக BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், வரும் ஜனவரி 3 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே டிராபி போட்டிகளில் மும்பை அணிக்காக அவர் விளையாட உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நியூசி.,க்கு எதிரான ODI தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

News December 28, 2025

நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

தமிழகத்தில் நாளை(டிச.29) உறைபனி ஏற்பட வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கொடைக்கானலில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், காலை 6 முதல் 8 மணி வரை வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் எப்படி இருக்கிறது?

error: Content is protected !!