News May 17, 2024

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வார இறுதி நாள்கள், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 555, நாளை 645, நாளை மறுநாள் 280 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

அரையாண்டு விடுமுறையை அறிவித்தது தமிழக அரசு

image

டிச.23-ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு நிறைவடையும் நிலையில், பள்ளி விடுமுறை நாள்கள் குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, டிச.24-ம் தேதி முதல் ஜன.4-ம் தேதி வரை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மொத்தமாக, 12 நாள்கள் விடுமுறை வருவதால், டூர் செல்ல இப்போதே திட்டமிடுங்கள். சிறப்பு பஸ்கள் தொடர்பான அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிட வாய்ப்புள்ளது.

News December 15, 2025

பரிதாப நிலையில் பிரபல தமிழ் நடிகை (PHOTO)

image

தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோருடன் காமெடியில் கலக்கிய நடிகை வாசுகி தற்போது ஆந்திராவில் முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். மக்களை சிரிப்பில் ஆழ்த்திய அவர், உடல் நலிவுற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவது பெரும் சோகம். ஆந்திர DCM பவன் கல்யாண், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் வாசுகிக்கு ₹4 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர். நடிகர் சங்கத்திடமும் அவர் உதவி கோரியுள்ளார்.

News December 15, 2025

அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

image

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.

error: Content is protected !!