News May 3, 2024

இன்று மாலை முதல் சிறப்புப் பேருந்து

image

முகூர்த்தம், வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் இன்று மாலை முதல் மே 5ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து மதுரை, கடலூர், சிதம்பரம், கோவை, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து திரும்ப ஏதுவாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெரிசலைத் தவிர்க்க www.tnstc.in, http://www.tnstc.in -இல் முன்பதிவு செய்யலாம்.

Similar News

News November 16, 2025

202 தொகுதிகளில் வெற்றி… ஆசை: நயினார் நாகேந்திரன்

image

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் 202 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றிபெறும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது அதிகப்படியான ஆசை என்றும் கூட சொல்லலாம் எனக்கூறிய அவர், அதிமுக கூட்டணியில் உள்ளதால் பெரும்பான்மை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

News November 16, 2025

2 ஆண்டுகளில் 12 நாடுகளில் Gen Z போராட்டம்!

image

1997-2012-க்கு இடையில் பிறந்த தலைமுறையே Gen Z. கடந்த 2 ஆண்டுகளில் நேபாளம், வங்கதேசம், மடகாஸ்கர், கென்யா, பெரு, மொராக்கோ, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, பராகுவே, மாலத்தீவு, மெக்சிகோ என 12 நாடுகளில் Gen Z நடத்திய போராட்டங்களில் சில ஆட்சியையே கவிழ்த்துள்ளன. ஊழல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக போராடும் இவர்கள், உலகளவில் மாற்றத்தை கொண்டு வரும் சக்தியாக வளர்ந்து வருகின்றனர்.

News November 16, 2025

நகை கடன்.. வந்தது முக்கிய அறிவிப்பு

image

அடகு கடை வணிகர்கள், தனியார் நிதிநிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் நகைகளுக்கு அதிக வட்டி(30% வரை) பெற்றுக் கொண்டு, அதே நகைகளை வங்கிகளில் குறைந்த வட்டிக்கு(8-17%) கடன் பெற்று பயனடைந்து வந்தனர். மறு அடகு என அழைக்கப்படும் இந்த நடைமுறையை ரிசர்வ் வங்கி நிறுத்தியுள்ளது. நகைகளின் உண்மையான உரிமையாளர்களை அறிந்து நகை கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் வங்கியை நாடுவதே சிறந்தது.

error: Content is protected !!