News June 26, 2024

இபிஎஸ் உத்தமன் போல பேசுகிறார்: ஆர்.எஸ்.பாரதி

image

தமிழ்நாட்டில் பல வழக்குகள் சிபிஐ விசாரணையில் நிலுவையில் இருப்பதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக சிபிஐ விசாரணை கோருவது குறித்து பேட்டியளித்த அவர், இபிஎஸ்ஸுக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இபிஎஸ் தான் ஒரு உத்தமன் போல தவறான தகவலை பரப்புவதாக அவர் சாடியுள்ளார்.

Similar News

News March 1, 2026

‘வாய் கிழிய பேசுவதை தவிர திமுக ஒன்றுமே செய்யவில்லை’

image

தமிழ்நாட்டை திமுக அரசு கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது என PM மோடி கூறியுள்ளார். பணம்தான் நமக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதே அவர்களின் எண்ணம் என்ற அவர், திமுக ஏழைகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை எனவும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், தமிழ்நாட்டு உரிமைகளை பற்றி வாய் கிழிய திமுக பேசுவதாகவும், பேச்சை தவிர திமுக ஒன்றுமே செய்ததில்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

News March 1, 2026

World War 3.. அன்றே கணித்தாரா பாபா வங்கா?

image

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்காவின் கணிப்புகள் உலக பேமஸ். இவர், 2026-ல் 3-ம் உலகப் போர் உருவாகலாம், அதில் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு முக்கியத் தொடர்பு இருக்கும் என கணித்திருந்தார். தற்போது இஸ்ரேல் – ஈரான் போர் நடந்து, மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் இருப்பதால், அவரது கணிப்பு உண்மையாகி வருவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?

News March 1, 2026

காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்கும் திமுக?

image

காங்கிரஸுக்கு 2021-ஐ விட தற்போது குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே 41 தொகுதிகளை காங்., கேட்டுவருகிறது. ஆனால், கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து கொடுக்கும் முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இம்முறை காங்கிரஸுக்கு 23 தொகுதிகளே கிடைக்கும் என்கின்றனர். இந்நிலையில், காங்கிரஸை திமுக பழிவாங்குகிறதா என கதர் சட்டைகள் கொதிக்கின்றனர்.

error: Content is protected !!