News July 12, 2024
பணிகளை தற்காலிகமாக நிறுத்த சபாநாயகர் வேண்டுகோள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் துறைமுகம் மற்றும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருவதால், கடற்கரை கிராம மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே இந்த பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு பணிகளை செய்ய வேண்டும் என, நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் நேற்று(ஜுலை 11) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்த சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
நெல்லை: ஆசிரியர் வேலை வேண்டுமா?

தமிழகத்தில் காலியாக உள்ள 1996 ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இன்று (ஜூலை.10) முதல் ஆகஸ்ட்12ம் தேதி வரை இங்கு <
News July 10, 2025
நெல்லை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

தாசில்தாரின் பணிகளான சான்றிதழ்கள் (சாதி, குடிமை, குடியிருப்பு, மதிப்பீடு) வழங்குதல், பட்டா மாற்றம், சிட்டா, அடங்கல் பராமரித்தல், அரசு வரிகள் வசூல், தேர்தல் பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் இதுவரை ஏதேனும் ஒரு காரணத்திற்காக தாசில்தார் அலுவலகம் சென்றிருப்போம், இவற்றில் ஏதேனும் ஒன்றில் லஞ்சம் தொடர்பான புகார் எழுந்தால் 04622580908 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். பிறரும் பயன் பெற ஷேர் பண்ணுங்க.
News July 10, 2025
செவிலியர்கள் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு

அரசு கிராம பகுதி சமுதாய செவிலியர் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை விடுத்துள்ள அறிக்கை: செவிலியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனை அருகே நடைபெற உள்ளது. இதில் நெல்லை மாவட்ட செவிலியர்கள் விடுப்பு எடுத்து சீருடை அணிந்து பங்கேற்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.