News August 7, 2024

செப்.9ல் சபாநாயகர் அப்பாவு ஆஜராக உத்தரவு

image

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதுதொடர்பாக பாபு முருகவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் செப்.09க்கு ஒத்திவைத்து சபாநாயகர் அப்பாவுவை நேரில் ஆஜராக இன்று(ஆக.07) உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

நெல்லை: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <> www.tahdco.com <<>> இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரை 0462561012 எண்ணுக்கு அணுகவும். SHARE பண்ணுங்க…

News December 15, 2025

நெல்லையில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News December 15, 2025

நெல்லை வந்த வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கற்கள் வீச்சு

image

சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை நோக்கி நேற்று புறப்பட்டது. அந்த ரயில் நேற்று மாலை 6 மணியளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கும், தாழநல்லூர் ரயில் நிலையத்திற்கும் இடையே சென்ற போது மர்மநபர்கள் ரயில் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த பெட்டிகளின் 5 கண்ணாடிகள் உடைந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!