News June 26, 2024
சபாநாயகர் அப்பாவு நடுநிலையாக இல்லை: இபிஎஸ்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில், சபாநாயகர் அப்பாவு நடுநிலையுடன் செயல்படவில்லை என இபிஎஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மிக முக்கியமான விஷயம் என்பதால், இந்த விவகாரத்தை பேரவையில் உடனே விவாதிக்க வலியுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அப்பாவு அரசியல் பேசுவது நல்லதல்ல என்றார். மேலும், பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவும் அரசியல் பேசலாம் எனவும் இபிஎஸ் தெரிவித்தார்.
Similar News
News September 18, 2025
உலகின் உயரமான Top 10 கட்டடங்கள்!

பொதுவாக உயரமான கட்டடங்களை பார்க்கும் போது எப்போதுமே வியப்பாகத்தான் இருக்கும். வானை எட்டும் உயரத்துக்கு இருக்கிறதே, எப்படி கட்டியிருப்பார்கள் என்றெல்லாம் மலைத்து நின்று இருப்போம். உலகின் உயரமான டாப் 10 உயரமான கட்டடங்களின் போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்கள். உங்களை கவர்ந்தது எது என்பதை கமெண்ட் செய்யுங்கள். லைக் செய்தும் உங்கள் விருப்பத்தை சொல்லுங்கள்.
News September 18, 2025
காலையில் வெடிக்க போகும் அரசியல் பூகம்பம்!

ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். ஆனால், எந்த விவகாரம் குறித்து பேச உள்ளார் என்பதை சஸ்பென்ஸாகவே வைத்துள்ளது. இருப்பினும், 2 மாநிலங்களில் உள்ள 2 தொகுதிகள் மற்றும் ஒரு High Profile லோக்சபா தொகுதியில் நடந்த வாக்கு திருட்டு குறித்து அவர் பேச உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News September 18, 2025
21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.