News December 21, 2024
‘மனம் விட்டு பேசுங்கள்’ ஜெயம் ரவி, ஆர்த்திக்கு அறிவுரை

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். விசாரணைக்கு ஆஜரான மத்தியஸ்தர், வழக்கில் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என கருத்து தெரிவித்தார். இதையடுத்து, தம்பதி இருவரும் மனம் விட்டு பேச அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கை ஜன.18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Similar News
News July 5, 2025
அஜித் குமார் மரணம்… ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், 2 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த கொடூரத்திற்கு காரணமானவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
News July 5, 2025
இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.