News March 29, 2025
தென் மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும்: சந்திரபாபு

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது தென் மாநிலங்களுக்கு ஒரு பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். எனவே நாம் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லையென்றால் வட இந்தியர்கள் இங்கு அதிகளவு வர நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் பிறப்பு விகிதம் 1.4%, ஆந்திராவின் பிறப்பு விகிதம் 1.5% என்றவாறு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
116 ரன்களில் KKR ஆல்-அவுட்

மும்பைக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் KKR அணி, வெறும் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனால், பேட்டிங் செய்த KKR அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் எடுத்தார். மும்பை பவுலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
News March 31, 2025
விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை, அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3- 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.
News March 31, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.