News December 22, 2024
கழிவுகளை கலப்பவர்களிடம் நஷ்டஈடு கேட்டும் சவுமியா

தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகளை கலப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று பசுமை தாயகம் தலைவர் சவுமியா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “தென்பெண்ணை ஆறு கர்நாடகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டிற்குள் வருகிறது. அந்த நீர் வரும்போதே ரசாயன நுரையோடுதான் வருகிறது. அதில் கழிவுகளைக் கொட்டு, அசுத்தப்படுத்தும் நபர்களிடம் நஷ்டஈடு கேட்க வேண்டும்” என்றார்.
Similar News
News September 9, 2025
அதிமுகவை ஒன்றிணைக்க அமித்ஷாவிடம் பேசுவது ஏன்?

மக்களின் பேராதரவு பெற்ற ஒரு கட்சி பல அணிகளாக பிரிந்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவு தான். பிரிந்தவர்களை எப்படி ஒன்று சேர்க்க விரும்புவோர் 1)கட்சியின் மூத்தத் தலைவர்களை, அனுபவஸ்தர்களை அணுகி ஆலோசனை பெறலாம், மத்தியஸ்தம் பேச சொல்லலாம் 2)தொண்டர்களை நேரில் சந்தித்து ஆதரவை திரட்டலாம். ஆனால், அதிமுகவில் எதிர்ப்புக் குரல் எழுப்பும் தலைவர்கள் நேராக ஏன் அமித்ஷாவை சந்திக்கின்றனர்?
News September 9, 2025
செங்கோட்டையன் முடித்த உடன் தம்பிதுரை தொடங்கினார்!

தமிழகம் திரும்பியதும் <<17658301>>செங்கோட்டையன்<<>> பேட்டியளித்த சிறிதுநேரத்தில், டெல்லியில் இருந்த தம்பிதுரை பேட்டியளித்தார். அப்போது, தானும் அமித்ஷாவை சந்தித்து பேசினேன் எனவும், செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை என்றும் தம்பிதுரை விளக்கம் அளித்தார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பற்றி கருத்துக் கூற முடியாது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News September 9, 2025
SCIENCE: டாக்டர்கள் பச்சை ஆடை அணிவது ஏன் தெரியுமா?

அறுவை சிகிச்சைகளின்போது டாக்டர்கள் பச்சை/நீல நிறங்களில் உடை அணிவதற்கு பின்னால் பெரிய காரணம் உள்ளது. 1990 வரை வெள்ளை நிற உடைதான் பயன்படுத்தப்பட்டது. ஆனால், சர்ஜரியின்போது டாக்டர்கள் வெகு நேரம் ரத்தத்தை(சிவப்பு நிறம்) பார்க்கின்றனர். இதனால் அவர்களின் கண்கள் சோர்வடையுமாம். எனவே பச்சை/நீல நிறங்களை பார்ப்பது கண்களுக்கு இதமாக இருக்கும் என்பதால் இந்த நிறங்களில் அவர்கள் உடை அணிகின்றனர். SHARE.