News March 29, 2024
தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்னையை உருவாக்குவதே திமுகவின் வேலையாக இருக்கிறது’ என பேசியுள்ளார்.
Similar News
News November 13, 2025
BREAKING: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் (நவ.14) 3 நாள்களுக்கு 920 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பஸ் இயக்கப்படும். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். SHARE IT
News November 13, 2025
டெல்லி சம்பவம்: ₹26 லட்சம் நிதி திரட்டிய டாக்டர்ஸ்

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில், அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த பயங்கரவாத சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள், வெடிபொருள் தயாரிப்பிற்காக ₹26 லட்சம் நிதி திரட்டி, டாக்டர் உமரிடம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News November 13, 2025
மேகதாது அணைக்கு அனுமதி வழங்கவில்லை: துரைமுருகன்

மேகதாது அணை கட்ட SC எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, கர்நாடகா தன்னிச்சையாக அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும் முன்பு தமிழக அரசிடம் கருத்து கேட்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு SC உத்தரவிட்டிருந்தது.


