News March 29, 2024
தாய்மொழியாக தமிழ் கிடைக்காததில் வருத்தம்

தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்னையை உருவாக்குவதே திமுகவின் வேலையாக இருக்கிறது’ என பேசியுள்ளார்.
Similar News
News November 3, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
மீனவர்கள் மீதான அத்துமீறலை தடுங்கள்: செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். எத்தனை முறை கூறினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மீன்பிடிப்பு முறையில் உள்ள கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்தால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
டிரம்ப் நிர்வாகத்தின் அடுத்த அடி.. EX RBI கவர்னர் வார்னிங்

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ள HIRE சட்டத்தால் இந்தியா கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து அவுட்சோர்ஸிங் முறையில் பெறப்படும் சேவைகளுக்கு 25% வரிவிதிக்க டிரம்ப் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதனால், இந்தியாவின் IT, BPO உள்ளிட்ட சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கவலை எழுப்பியுள்ளார்.


