News November 8, 2025
‘Sorry அம்மா, அப்பா.. நான் செத்துப் போறேன்’

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் உ.பி.யைச் சேர்ந்த முகமது ஆன் (21) என்ற மாணவர், ராவத்பூரில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ‘அம்மா, அப்பா தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியவில்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பு’ என்று எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் மீட்டுள்ளனர்.
Similar News
News November 8, 2025
ஆஸ்கர் அருங்காட்சியகத்தில் முதல் இந்திய படம்!

ஆஸ்கர் வழங்கும் அகாடமி அமைப்பு, சினிமா துறைக்கென உருவாக்கிய மியூசியம், அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் மியூசியம். இங்கு இதுவரை எந்த இந்திய படமும் திரையிடப்பட்டது இல்லை. ஆனால், இந்த குறையை நீக்கி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளது ‘பிரமயுகம்’. ராகுல் சதாசிவன் இயக்கத்தில், மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம், இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
News November 8, 2025
டிச.12-ல் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

இடைக்கால தீர்வாக வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டிச.12-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், அந்தந்த சாதியின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தினார்.
News November 8, 2025
ALERT: செல்போன் நம்பரை வெளியிட்டார் நடிகை ருக்மினி

‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்கு பிறகு நேஷனல் கிரஷ் ஆக மாறியுள்ளார் ருக்மினி வசந்த். இந்த நிலையில், அவரை போல யாரோ ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து, முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, தனது சோசியல் மீடியாவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக 9445893273 என்ற செல்போன் எண்ணில் இருந்து தன் பெயரைக் கூறி யாரேனும் பேசினால் நம்ப வேண்டாம். அவர்களிடம் உஷாராக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


