News October 5, 2025
சோனம் வாங்சுக் விடுதலை கோரிய மனு நாளை விசாரணை

மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு முக்கிய காரணம் என காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் கணவர் குற்றமற்றவர் எனக் கூறி, அவரை விடுதலை செய்யுமாறு, அவரது மனைவி கீதாஞ்சலி SC-ல் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நாளை (அக்.6) அரவிந்த் குமார், NV அஞ்சரியா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணக்கு வரும் என பட்டியலிடப்பட்டுள்ளது.
Similar News
News October 5, 2025
தமிழகத்தின் அரசியலால் தீண்டாமை: RN ரவி

தமிழகத்தின் தற்போதைய அரசியலால் தீண்டாமை, பிரித்தாள்வது நிகழ்வதாக கவர்னர் RN ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் மாநிலத்தில் சமூகநீதிக்கு எதிரான சம்பவங்களை தினமும் செய்தித் தாள்களில் படிப்பது வேதனையாகவுள்ளதாகவும் கூறியுள்ளார். பங்கேற்று உரையாற்றிய அவர், கேரள அரசியல் நாராயண குருவின் கொள்கைகளை முடக்கவில்லை என தெரிவித்த அவர், தமிழக அரசியல் வள்ளலாரின் போதனைகளை பரப்ப முன்னுரிமை அளிக்கவில்லை என்றார்.
News October 5, 2025
டிராபியை கொடுக்காமல் இருந்ததற்காக தங்க பதக்கம்

ஆசிய கோப்பை டிராபியை, பாக்., அமைச்சரும் ACC தலைவருமான மொஹ்ஷின் நக்வியிடமிருந்து பெற இந்தியா மறுத்தது. இதனால் டிராபியை தன்னுடனே எடுத்துச் சென்ற நக்வி, ACC ஆபீஸீல் வந்து டிராபியை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருந்தார். இந்நிலையில், டிராபி தொடர்பாக நக்வி எடுத்த நிலைப்பட்டை கெளரவிக்கும் வகையில், அவருக்கு Shaheed Zulfiqar Ali Bhutto Excellence தங்க பதக்கம் வழங்கப்படவுள்ளது.
News October 5, 2025
கரூர் துயரில் அரசியல் செய்யாத கட்சி பாஜக: வினோஜ்

கரூர் விவகாரத்தில் யாரையும் ஆள் காட்டி தப்பிக்கும் பழக்கம் பாஜகவுக்கு இல்லை என வினோஜ் P செல்வம் கூறியுள்ளார். ஆனால், திமுகவினர் பழி போடுவதிலேயே குறியாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். இந்த சம்பவத்தின் மூலம் தவெகவை NDA கூட்டணிக்கு இழுப்பதாக கூறப்படும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்த அவர், இதுநாள் வரை கரூர் மரணங்களில் அரசியல் செய்யாத ஒரே கட்சி பாஜக மட்டுமே என்று கூறினார்.