News August 4, 2024
சீக்கிரம் எழுவதற்கான சில டிப்ஸ்..!

*உங்கள் அலாரத்தை வழக்கத்தை விட தினமும் 15 நிமிடங்கள் குறைக்கலாம். உதாரணமாக, 8 மணிக்கு எழுபவர்கள் 7.45க்கு அலாரம் வைக்கலாம். *சீக்கிரம் எழுவதற்கு, இரவில் உடலுக்கு போதுமான ஓய்வை அளிக்க வேண்டும். அதற்கு இரவில் அதிக நேரம் விழிக்காமல், முன் கூட்டியே தூங்க வேண்டும். *சீக்கிரம் எழுந்திருக்க மனதளவில் தயார்படுத்துங்கள். இது உடலில் உள்ள பயாலஜிக்கல் கிளாக் மூலம் நம்மை சரியான நேரத்தில் எழுப்பும்.
Similar News
News December 22, 2025
பொங்கலுக்கு அரசு ₹3000 கொடுத்தாலும்..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் என்ன தவறு என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது மதம் தொடர்பான பிரச்னை இல்லை; தீபம் ஏற்றுவது மண்ணின் மைந்தர்களின் உரிமை எனக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் திமுக அரசியல் செய்திருக்கக் கூடாது எனத் தெரிவித்தார். மேலும், திமுக அரசு பொங்கலுக்கு ₹3000 கொடுத்தாலும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்றும் சாடியுள்ளார்.
News December 22, 2025
தேங்காய் எண்ணெய் உறைகிறதா? இதோ தீர்வு

குளிர்காலத்தில், தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்கலாம் என பாட்டிலை எடுத்தால் அது உறைந்து போய் இருக்கும். இதற்கு நீங்கள் எண்ணெய் பாட்டிலை கிச்சன் அடுப்பின் அருகில் வைக்கலாம். அங்கு சூடு தங்குவதால் எண்ணெய் உறையும் வாய்ப்பு குறைவு. அதேபோல, தேங்காய் எண்ணெயை Thermos பாட்டிலில் சேமியுங்கள். மேலும், தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெயை கலந்து வைத்தால் அது உறைந்து போவதை தடுக்க முடியும்.
News December 22, 2025
காங்கிரஸ் பொண்ணு, BJP பையன்.. கட்சியை கடந்த காதல்!

இருவேறு சித்தாந்தங்கள், இருவேறு கொள்கைகள் என எதிர்திசையில் இருந்தாலும், இன்று காதல் அவர்களை ஒன்றிணைத்துவிட்டது. ம.பி.,யின் Ex அமைச்சர் தீபக் ஜோஷி(63), பல்லவி ராஜ் சக்சேனா(43) என்ற பெண்ணை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். இதிலென்ன விஷேசம் உள்ளது என கேட்கலாம். தீபக் பாஜகவை சேர்ந்தவர், பல்லவி காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளராக இருந்தவர். காதல் வர நினைத்துவிட்டால், எந்த விஷயமும் ஒரு தடையில்லையே!


