News August 4, 2024
சீக்கிரம் எழுவதற்கான சில டிப்ஸ்..!

*உங்கள் அலாரத்தை வழக்கத்தை விட தினமும் 15 நிமிடங்கள் குறைக்கலாம். உதாரணமாக, 8 மணிக்கு எழுபவர்கள் 7.45க்கு அலாரம் வைக்கலாம். *சீக்கிரம் எழுவதற்கு, இரவில் உடலுக்கு போதுமான ஓய்வை அளிக்க வேண்டும். அதற்கு இரவில் அதிக நேரம் விழிக்காமல், முன் கூட்டியே தூங்க வேண்டும். *சீக்கிரம் எழுந்திருக்க மனதளவில் தயார்படுத்துங்கள். இது உடலில் உள்ள பயாலஜிக்கல் கிளாக் மூலம் நம்மை சரியான நேரத்தில் எழுப்பும்.
Similar News
News November 26, 2025
திருவாரூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன்

நன்னிலம் பகுதியைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று விளையாடி கொண்டிருந்த போது 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருந்த பள்ளியில் அடைத்தனர்.
News November 26, 2025
வேலூர்: இளைஞர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த பெண்!

வேலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.17.5 லட்சம் மோசடி செய்த காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் சந்தோஷ் அளித்த புகாரின் பேரில் சுமதி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மோசடி உறுதி செய்யப்பட்டதால், அந்த பெண்ணை கைது செய்து, மேற்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 26, 2025
இப்படி விளக்கேத்துங்க.. வீட்டில் அதிர்ஷ்டம் சேரும்!

தினமும் மாலை சரியான திசையில், சரியான முறையில் விளக்கேற்றினால், வீட்டில் அமைதி, செழிப்பு & லட்சுமி தேவியின் ஆசி கிடைக்கும் என வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. தினமும் மாலை வீட்டின் பிரதான நுழைவாயில் அருகில் பசு நெய்யால் விளக்கு ஏற்றுவது மிகவும் புனிதமானதாம். இதனால், லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைகிறார் என்றும், வீட்டின் அதிர்ஷ்டத்தை அதிகரித்து செல்வத்தை கொண்டு வரும் எனவும் நம்பப்படுகிறது.


