News August 15, 2024

பணக்காரர் ஆவதற்கான சில வழிமுறைகள்

image

பணக்காரர் ஆவதற்கு பொருளாதார நிபுணர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற கோருகின்றனர். *முடிந்த வரையில் சேமிப்பை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும். *தேவையில்லாத கடன்களை தவிர்க்க வேண்டும். *பல்வேறு வழிகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும். *செலவுகளை குறைக்க வேண்டும். *சிறந்த முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும். *பல்வேறு துறைகளில் நீண்ட காலத்திற்கு பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

Similar News

News August 15, 2025

பாரபட்சம் காட்டும் மத்திய அரசு: ஸ்டாலின் தாக்கு

image

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்வதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வளர்ச்சியை விட TN அரசின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வில் மாநிலங்களின் பங்கு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மாநிலத்தின் நிதியை கூட போராடி வாங்க வேண்டியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

News August 15, 2025

6 ஆண்டுகளில் 200% உயர்ந்த தங்கம்.. முதலீட்டுக்கு ஏற்றதா?

image

2019-ல் ₹30,000-க்கு விற்ற 24 கேரட் 10 Gram தங்கம் 200% உயர்ந்து தற்போது ₹1,01,340-யை தொட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 18% உயர்ந்து வருகிறது. ரஷ்யா – உக்ரைன், ஈரான் – இஸ்ரேல் போர்கள், கொரோனா காலத்தில் பொருளாதார சரிவு உள்ளிட்டவை முதலீட்டாளர்களின் கவனத்தை தங்கத்தின் பக்கம் ஈர்த்ததாகவும், இது அடுத்த 5 ஆண்டுகளில் ₹2.25 லட்சம் வரை உயரலாம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். உங்கள் கருத்து?

News August 15, 2025

தேசியக் கொடி முதலில் எங்கு, யாரால் ஏற்றப்பட்டது தெரியுமா?

image

சுதந்திர தினத்தில் எங்கும் நிறைந்திருக்கும், தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார் என தெரியுமா? 1921-ல் பிங்காலி வெங்கையா இன்று நாம் பயன்படுத்தும் மூவர்ணக் கொடியை வடிவமைத்தார். இந்தியாவில் முதன் முதலில், டிசம்பர் 30, 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் மூவர்ணக் கொடி அந்தமானின் போர்ட் பிளேயரில் ஏற்றப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயரின் பிடியில் இருந்து விடுவிப்பதாக கூறி, நேதாஜி கொடி ஏற்றி இருந்தார்.

error: Content is protected !!