News August 22, 2025
பாசிஸ்ட்டுகளை பார்த்து சிலர் பம்முகிறார்கள்: உதயநிதி

TN அரசியலில் சில அடிமைகள் பாசிஸ்ட்டுகளை பார்த்து பம்முகிறார்கள் என DCM உதயநிதி காட்டமாக பேசியுள்ளார். சென்னையில் Ex அமைச்சர் ரகுமான்கான் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ரகுமான்கான் எழுதிய ‘மன்னராக இருந்தாலும்.. மண்டியிடாது.. மண் பொம்மை’ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், சிலர் இன்று டெல்லிக்கு அடிமைகளாக இருப்பதாக மறைமுகமாக விமர்சித்தார்.
Similar News
News March 27, 2026
பிரேமலதா அதிர்ச்சி.. திமுக கூட்டணியில் பரபரப்பு

தேமுதிக கேட்கும் தொகுதிகளை திமுக தர மறுப்பதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 10 தொகுதிகளை கேட்டு பெற்ற நிலையில், அடுத்து அவை எந்த தொகுதிகள் என்ற பட்டியலை பிரேமலதா தொகுதி பங்கீடு குழுவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் கேட்கும் விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகளை திமுக கொடுக்க மறுத்துவிட்டதாம். ரிஷிவந்தியத்தில் போட்டியிட திட்டமிட்ட பிரேமலதா இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். <<-se>>#TNELECTION26<<>>
News March 27, 2026
போர் பதற்றம்.. பலனடையும் உள்நாட்டு சுற்றுலா துறை

விடுமுறைக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்ட பயணிகளின் கவனம் தற்போது உள்நாட்டு சுற்றுலா மீதும் திரும்பி உள்ளது. மேற்காசிய போர் பதற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீர், லடாக், ஹிமாச்சல், சிம்லா, குலு, மணாலி, ஷில்லாங் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் சிரமங்களை சந்தித்தாலும், உள்நாட்டு சுற்றுலா துறை பரபரப்பாக இயங்கி வருகிறது.
News March 27, 2026
அதிமுக கூட்டணியில் தொடருமா புரட்சி பாரதம்?

அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் தொடருமா என்பது குறித்து இன்று தெரியவரும். 4 தொகுதிகள் கேட்ட நிலையில் ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால், கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி அதிருப்தி அடைந்துள்ளார். இந்நிலையில், நாங்கள் எதிர்பார்த்தது ஒன்று நடந்தது ஒன்று என்று கூறிய அவர், கட்சியில் நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


