News April 5, 2025
மேலும் சில மீனவர்கள் விடுதலை

இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.
Similar News
News November 7, 2025
FLASH: விலை ஒரே அடியாக ₹8,000 அதிகரித்தது

கடந்த 2 மாதங்களாக தங்கம், வெள்ளி விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் அதன் தாக்கம் பட்டிலும் எதிரொலித்துள்ளது. குறைந்த அளவிலான ஜரிகைகள் கொண்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள் இதற்கு முன்பு ₹10,000 – ₹12,000 வரை விற்கப்பட்டன. ஆனால் அதன் விலை ₹20,000 ஆக தற்போது அதிகரித்துள்ளது. தங்கம் வெள்ளியை தொடர்ந்து பட்டும் ஏழை எளிய மக்களுக்கு எட்டா கனியாக மாறியுள்ளது.
News November 7, 2025
கவுரி கிஷனுக்கு ஆதரவாக நிற்கும் சந்தோஷ் நாராயணன்

நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் ஒருவர் உங்கள் எடை என்ன என கேட்டது பெரும் சர்ச்சையானது. யூடியூபருக்கு மேடையிலேயே கவுரி கிஷன் தக்க பதிலடி கொடுத்த நிலையில், அவரது தைரியத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது கருத்து சரி என்பது போல் பத்திரிகையாளர் தொடர்ந்து பேசியது, அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 7, 2025
நாளை சங்கடஹர சதுர்த்தி… நன்மைகள் என்னென்ன?

நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி தொடங்கி, மறுநாள் காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்திக்கு உகந்தது என்பதால், நாளை மாலை விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். முக்கியமாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், கடன் தொல்லை உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.


