News April 5, 2025
மேலும் சில மீனவர்கள் விடுதலை

இலங்கை அரசு மேலும் சில தமிழக மீனவர்களை விடுவிக்க சம்மதித்திருப்பதாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தைத் தொடர்ந்து, நேற்று 11 மீனவர்கள் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய மிஸ்ரி, மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேசியிருப்பதாகக் கூறினார்.
Similar News
News November 22, 2025
NATIONAL 360°: மூதாட்டியிடம் ₹32 லட்சத்தை பறித்த கும்பல்

*பெங்களூருவில் குடும்பத்துக்கு பிரச்னையாக இருந்த தம்பியை கொன்ற அண்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். *மும்பையில் போலீசார் போல் ஏமாற்றி 72 வயது மூதாட்டியிடம் இருந்து ₹32 லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். *டெல்லியில் 8 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். *பிஹாரில் மாநில மகளிர் அணி தலைவர் ராஜிநாமா செய்து, கட்சி தலைமையகம் எதிரே போராட்டம் நடத்தினார்.
News November 22, 2025
வேலையில் எந்த ஷிப்ட் சிறந்தது தெரியுமா?

பொதுவாக பணியிடங்களில் பகல் (ஜெனரல்) ஷிப்ட் இருக்கும். பல இடங்களில் காலை, மதியம், மற்றும் நைட் ஷிப்ட் என மாறிமாறி வரும். ரொட்டேஷனல் ஷிப்ட் இருக்கும். பகல் ஷிப்ட் (அ) தினமும் ஒரே ஷிப்ட் உடல்நலத்துக்கு பாதுகாப்பானது என்கின்றனர் டாக்டர்கள். ஷிப்ட் மாறி மாறி வேலை செய்யும்போது, அதற்கேற்ப உடல் மாற சிரமப்படுகிறது. இதன் விளைவால் இதயநோய், நீரிழிவு, தூக்கமின்மை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது.
News November 22, 2025
SIR சீர்திருத்தங்களை தடுக்கும் எதிர்க்கட்சிகள்: அமித்ஷா

நாட்டில் ஊடுருவலைத் தடுப்பது பாதுகாப்பிற்கு மட்டுமல்லாமல், ஜனநாயக அமைப்பு மாசுபடுவதை தடுக்கவும் உதவும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில அரசியல் கட்சிகள் ஊடுருவல்களை பாதுகாக்கும் வகையில், ECI மேற்கொள்ளும் SIR பணிகளுக்கு தடையாக நிற்பதாக சாடியுள்ளார். CM ஸ்டாலின், மம்தா உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் SIR-க்கு எதிராக குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


