News March 17, 2024
சோமாலியா கடற்கொள்ளையர்கள் கைது

சோமாலியா கடற்கொள்ளையர்கள் 35 பேரை இந்திய கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். சோமாலியா கடற்கொள்ளையர்களால் வணிக கப்பல்களுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரபிக் கடலில் ரோந்து சென்ற இந்திய கடற்படையினர், கொள்ளையர்கள் சென்ற ரூயென் கப்பலை தடுத்து நிறுத்தினர். அதைத் தொடர்ந்து பிணைக் கைதிகளாக இருந்த 17 பேரை பாதுகாப்பாக மீட்டதுடன், 35 பேரை அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News April 8, 2025
வங்கிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை

வங்கிகளுக்கு வருகிற 10ஆம் தேதி (11ஆம் தேதி தவிர) முதல் 4 நாட்கள் விடுமுறை ஆகும். 10ஆம் தேதி மகாவீரர் ஜெயந்திக்கு வங்கிகளுக்கு விடுமுறை. 12ஆம் தேதி 2-வது சனிக்கிழமை வருவதால் அன்றும் விடுமுறை. 13-ம் தேதி ஞாயிறு. 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு. அதனால் அந்த 2 நாட்களும் விடுமுறை. மேற்கண்ட 4 நாட்களிலும் வங்கிகள் திறக்கப்படாது. இணைய வங்கி சேவை இருக்கும். இதற்கேற்ப உங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ளவும்.
News April 8, 2025
துரத்தி வரும் KKR

KKR – LSG இடையேயான ஐபிஎல் போட்டியில், 239 என்ற இமாலய இலக்கை துரத்தும் KKR அணி, விடாமல் சண்டை செய்து வருகிறது. முதலில் விளையாடிய LSG அணி, மார்ஷ் & பூரனின் அபாரத்தால், 20 ஓவர்களில் 238 ரன்கள் குவித்தது. அதனை சேஸ் செய்து வரும் KKR அணி, ரஹானே, வெங்கடேஷ் ஐயரின் அதிரடியால் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 129 ரன்கள் குவித்துள்ளது. எந்த அணி வெல்லும்?
News April 8, 2025
பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன்: அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய 1,000 மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக ரூ.3 லட்சம் கடன் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மானியக் கோரிக்கை மீது பதில் தாக்கல் செய்துள்ளார். அதில், நிலமற்ற ஏழை பெண் விவசாய தொழிலாளர்கள் 2 ஏக்கர் நிலம் வாங்க ரூ.5 லட்சம் வரை கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.