News March 25, 2025

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி வேண்டும்: திருமா

image

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் மெக்வாலிடம் திருமாவளவன் கோரிக்கை அளித்து வலியுறுத்தினார். 2018 முதல் நியமிக்கப்பட்ட 715 ஐகோர்ட் நீதிபதிகளில், SC- 22, ST- 16, OBC-89, சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த 37 பேர் மட்டுமே உள்ளதாகவும், இந்த அப்பட்டமான புறக்கணிப்பு பன்முகத் தன்மைக்கு சவாலாக உள்ளதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News March 26, 2025

BJP ஆட்சியில் உ.பி. அமைதியாக இருக்கிறது: யோகி

image

உ.பியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் எந்தவொரு மதக்கலவரமும் நடக்கவில்லை என CM யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். 100 இந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்கள் மத்தியில் 50 இந்துக்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா? வங்கதேசமே சிறந்த உதாரணம் என்றார்.

News March 26, 2025

கள்ளக்காதல்: யோகா டீச்சரை தீர்த்துக் கட்டிய வீட்டு ஓனர்!

image

ஹரியானாவில் மாயமான யோகா டீச்சர் ஜெகதீப் 3 மாதங்களுக்குப் பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 7அடி ஆழ போர்வெல் பள்ளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்ட நிலையில் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரமான கொலையை செய்தவர் ஜெகதீப் குடியிருந்த வீட்டு ஓனர் ஹர்தீப். தனது மனைவியுடன் தகாத உறவில் இருந்ததால் தீர்த்துக் கட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

News March 26, 2025

துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

image

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?

error: Content is protected !!