News April 5, 2025
ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News December 21, 2025
டாக்கா பல்கலை., ஹாலுக்கு ஹாடி பெயர்

பங்களாதேஷின் டாக்கா பல்கலை.,யில் உள்ள பங்காபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் ஹால், சுட்டுக் கொல்லப்பட்ட ஷாகித் ஷெரீப் உஸ்மான் ஹாடி ஹால் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. Inqilab Mancha அமைப்பின் தலைவரான ஹாடி, சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. அதேநேரம், அவர் 2026 பார்லிமெண்ட் தேர்தலில் போட்டியிட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
News December 21, 2025
தோனிக்கு பிறகு ஜிதேஷ் சர்மா சிறப்பாக செய்தார்: கவாஸ்கர்

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், ஜிதேஷ் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், MS தோனிக்கு பிறகு DRS-களில் கேப்டனுக்கு சிறப்பாக உதவியுள்ளார் என்றும் ஜிதேஷின் திறமையை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 21, 2025
ரஜினியிடம் பேசியதில் மிளகு ரசமே கிடைத்தது: தமிழருவி

ரஜினி கட்சி தொடங்காததற்கு தமிழருவி மணியனே காரணம் என்றும், கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே ₹200 கோடியை ரஜினியிடம் வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழருவி, தான் ரஜினியிடம் இருந்து பணம் ஏதும் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது மிளகு ரசம் மட்டுமே கிடைத்தது, 3 முறை சந்தித்ததில் 3 கோப்பை மிளகு ரசம்தான் அருந்தினேன் என்றும் கூறியுள்ளார்.


