News April 5, 2025
ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News August 13, 2025
டிரம்ப்பை சந்திக்கும் PM மோடி

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐநா பொது சபை கூட்டத்தில் PM மோடி பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா உடனான வர்த்தக பிரச்னைகளுக்கு மத்தியில் PM அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும், டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களுடன் பிரதமர் உயர்மட்ட ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
News August 13, 2025
ஆக.16 லீவ்! ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் கிடையாது

வாரந்தோறும் சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடைபெற்று வருகிறது. ஆனால், வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி வருகிறது. இதனால், அன்றைய தினம் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் சனிக்கிழமை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெறாது என்று அரசு தரப்பில் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News August 13, 2025
முதலீடுகள் பற்றி வெள்ளை அறிக்கை தேவை: அன்புமணி

இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு முதலீடுகள் மூலம் 28,516 பேருக்கு வேலை கிடைக்கும் என CM உறுதியளித்ததை சுட்டிக்காட்டிய அவர், அதுபோன்று எதுவும் நடக்கவில்லை என சாடியுள்ளார். 10.62 லட்சம் கோடி முதலீடு ஒப்பந்தங்கள் கையெழுத்தானபோதும், ஈர்க்கப்பட்ட முதலீடு வெறும் ₹18,498 கோடிதான் எனவும் தெரிவித்துள்ளார்.