News April 5, 2025

ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

image

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Similar News

News December 22, 2025

சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து புதிய அப்டேட்

image

சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 8 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். இந்த 49வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 21 வரை 14 நாட்கள் நடைபெறும். வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டும் காலை நேரங்களில் நடைபெறும் கண்காட்சி, இந்த முறை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என பபாசி தெரிவித்துள்ளது.

News December 22, 2025

சாரி அம்மா, அப்பா.. என்னால படிக்க முடியல!

image

சத்தீஸ்கர் யூனிவர்சிட்டியில் 2-ம் ஆண்டு Engg., படித்து வந்த மகளுக்கு பெற்றோர் போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால், வார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில், மகள் எழுதி வைத்திருந்த Suicide Note தான் கிடைத்துள்ளது. முதல் செமஸ்டரில் 5 அரியர் வைத்திருந்த மகள், ‘சாரி மம்மி, டாடி, உங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியல’ என எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News December 22, 2025

நீங்காத துயரை கொடுத்த 2025!

image

2025 இந்தியாவிற்கு மறக்க முடியாத துயரங்களையே கொடுத்து சென்றுள்ளது. அகமதாபாத் விமான விபத்தும், கரூர், திருப்பதி, டெல்லி ரயில் நிலையம், பெங்களூரு போன்ற கூட்ட நெரிசல்களிலும் சிக்கி பல இன்னுயிர்களை இந்த ஆண்டு இழந்துவிட்டோம். அதேபோல, கோவா கிளப் விபத்து, பஹல்காம் தாக்குதல் போன்றவற்றின் தாக்கமும் இன்னும் மக்கள் மனதில் இருந்து மறையவில்லை. இவற்றுடன் இயற்கையும் மேக வெடிப்பாக, மழையாக பலரை கொன்றது.

error: Content is protected !!