News April 5, 2025
ஐஸ்கிரீமில் சோப்பு தூள் கலப்பு.. எச்சரிக்கை

கோடை வெயில் தொடங்கி விட்டதால், ஐஸ்கிரீம், குளிர்பானங்களை மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ‘கிரீம்’ உருவாக்க துணிகளுக்கான சலவை சோப்பு தூளும், குளிர்பானங்களில் நுரையை அதிகரிக்க ‘பாஸ்போரிக்’ அமிலமும், சர்க்கரைக்கு பதிலாக சுவை & நிறத்தை மேம்படுத்த சாக்ரினும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதை உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Similar News
News November 26, 2025
ராஜினாமா செய்த கையோடு செங்கோட்டையன் சம்பவம்

MLA பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், ட்விஸ்டுக்கு மேல் ட்விஸ்ட் கொடுத்து வருகிறார். TVK-வில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவியை ராஜினாமா செய்த கையோடு, சபாநாயகர் அறையிலேயே சேகர் பாபு – செங்கோட்டையன் பேசி வருகின்றனர். ஒருவேளை திமுகவில் இணைந்தால் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்பதால், ஈரோடு முகமாக இருக்கும் அமைச்சர் முத்துசாமியை திமுக தலைமை சமாதானம் செய்கிறாதாம்.
News November 26, 2025
கே.ஏ.செங்கோட்டையன் கடந்து வந்த அரசியல் பாதை!

1972-ல் திமுகவிலிருந்து விலகிய செங்கோட்டையன், அதிமுகவில் இணைந்தார். 1975 கோவை பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி MGR-ன் குட் புக்கில் இடம்பெற்றார். 1977-ல் முதல்முறையாக சத்தியமங்கலம் MLA ஆனார். 1980 முதல் கோபியில் போட்டியிட்டு 8 முறை வெற்றி கண்டவர் இவர். 1989-ல் பிளவின்போது ஜெ., பக்கம் நின்றார். 1991-1996 வரை போக்குவரத்து அமைச்சர், 2011 – 2016-ல் விவசாயம், 2016-2021-ல் பள்ளிக்கல்வித்துறையை கவனித்தார்.
News November 26, 2025
இனி பெட்ரோல், டீசல் வேண்டாம்: அமைச்சர்

இந்தியாவில் காற்று மாசை குறைக்க பெட்ரோல், டீசலுக்கு பதிலாக பயோ எரிபொருள்களை உருவாக்கவேண்டும் என நிதின் கட்கரி கூறியுள்ளார். ஒரு நாட்டுக்கு பொருளாதாரமும், சுற்றுச்சூழலும் முக்கியம் என்ற அவர், இந்தியாவில் 40% காற்று மாசு வாகன புகையால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். எனவே, மாற்று எரிபொருளை உருவாக்கினால் பெட்ரோல் இறக்குமதி செலவுகளை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழலையும் காக்கலாம் என தெரிவித்துள்ளார்.


