News March 29, 2024
குட்டித்தூக்கம் போடுவதில் இவ்வளவு நன்மைகளா?

அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், லேசாக கண்ணை கட்டும். அப்போது குட்டித்தூக்கம் போடுவது பல நன்மைகளை அளிக்குமாம். குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். தேவையற்ற கவலை, பதற்றத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்குமென சமீபத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
பாஜகவுக்கு ஆதரவாக EC செயல்படுகிறது: ஜோதிமணி

பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும், ஆனால் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த விஷயத்தில் பாஜகவின் துரோகத்திற்கு அதிமுக துணை போக கூடாது என்றும் வலியுறுத்திள்ளார்.
News October 29, 2025
தகதகவென மின்னும் மாளவிகா

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து வரும் மாளவிகா மோகனன், தொடர்ச்சியாக இன்ஸ்டாவில், போட்டோஸை பதிவு செய்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்திய போட்டோஸ் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இதில், மாளவிகா, பொன்னொளியில் மலர்ந்த முகத்துடன், உயிர் பெற்ற ஓவியமாக, பிரகாசமாக ஒளிர்கிறார். உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News October 29, 2025
EPS தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில், EPS தலைமையில், பூத் கமிட்டி அமைக்க நியமிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும் நவ.2-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் பொறுப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


