News March 20, 2024

இதுவரை ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

image

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Similar News

News November 22, 2025

திடீரென மனம் மாறிய டிரம்ப்!

image

நியூயார்க் மேயர் <<18203048>>மம்தானிக்கும்<<>>, டிரம்ப்புக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இருவரும் வெள்ளை மாளிகையில் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பை அடுத்து, நியூயார்க் வளர்ச்சிக்கும் தேவையானவை செய்து தரப்படும் எனவும், மம்தானி சிறந்த மேயராக இருப்பார் எனவும் டிரம்ப் புகழ்ந்துள்ளார். நேற்று வரை எதிரும் புதிருமாய் இருந்த இவர்கள் இப்படி இணக்கம் காட்டுவது எப்படி என மக்கள் கேட்கின்றனர்.

News November 22, 2025

பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

image

கடலூர் மாவட்ட பாஜக விவசாய அணி துணைத் தலைவர் செல்வராசு, அமைச்சர் கணேசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும், அவரது ஆதரவாளர்கள் சுமார் 100 பேரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த சில தினங்களாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் <<18345411>>மாற்றுக் கட்சியினர்<<>> பலரும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இதனால், திமுகவும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

News November 22, 2025

ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்துக்கு இதுதான் காரணமா?

image

எங்கு போனாலும் ரசிகர்களால் பிரைவசி இல்லை என்பதால் அதன் தாக்கம் குடும்பத்தின் மேல் விழுந்துள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுடன் தனிப்பட்ட நேரத்தை செலவிடமுடியாமல் இருந்ததாக கூறிய அவர், குடும்பமாக ஒன்று கூடுவதும், ஒரே டேபிளில் உட்கார்ந்து உணவருந்துவதும் மிகக் குறைவு என கூறிவுள்ளார். இந்நிலையில், இதனால்தான் அவருக்கு விவாகரத்து ஆனதா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

error: Content is protected !!