News March 20, 2024
இதுவரை ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ரூ.5.37 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.4.37 கோடி ரொக்கம், ரூ.0.36 கோடி மதிப்பில் மதுபானங்கள், ரூ.0.25 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.0.20 கோடி மதிப்பில் இலவச பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Similar News
News November 24, 2025
இந்திய பெண் உளவாளியை கௌரவித்த ஃபிரான்ஸ்

2-ம் உலகப்போரின் போது, ஹிட்லர் படைகளுக்கு எதிராக உளவு பார்த்த, பிரிட்டிஷ் – இந்திய வம்சாவளி நூர் இனாயத் கானுக்கு தபால் தலை வெளியிட்டு ஃபிரான்ஸ் கவுரவித்துள்ளது. திப்பு சுல்தானின் வழித்தோன்றலான நூர் இனாயத் கான், ஃபிரான்ஸ் நினைவு அஞ்சல் தலையால் கௌரவிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண்மணி ஆவார். நாஜி ஆக்கிரமிப்பு ஃபிரான்ஸில் ஊடுருவி உளவு பார்த்ததாக 1944-ம் ஆண்டில் அவர் தூக்கிலிடப்பட்டார்.
News November 24, 2025
நேற்று தந்தை, இன்று காதலன்.. அடுத்தடுத்து வந்த சோதனை

ஆட்டம், பாட்டம் என இருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பால் நின்றுபோனது. தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழலில், இன்று அவரது காதலர் பலாஷுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஹெவி ஃபீவர் ஏற்பட்டதால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், ஸ்மிருதியின் தந்தை விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
News November 24, 2025
சித்தராமையா vs DKS: உச்சம் அடைந்த கோஷ்டி பூசல்

கர்நாடகா <<18364137>>காங்கிரஸில்<<>> கோஷ்டி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. டிகே சிவக்குமாரை CM ஆக்க கோரி, அவரது ஆதரவு MLA-கள் 3-வது முறையாக டெல்லிக்கு படையெடுத்துள்ளனர். 2.5 ஆண்டுகள் சித்தராமையா, 2.5 ஆண்டுகள் டிகே சிவக்குமார் CM என தலைமை வாக்குறுதி கொடுத்ததாகவும், அதை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேவேளையில், அம்மாநில அமைச்சர்களை கார்கே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


