News April 1, 2024
இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 1822 புகார்கள் வந்ததாகவும், அதில் 1803 புகார்கள் முடித்துவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
சற்றுமுன்: பணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

வடகிழக்கு பருவமழை & டிட்வா புயல் மழையால் பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்தன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்க தமிழக அரசு ₹1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பிப்.1 முதல் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.
News January 20, 2026
திட்டமிட்டு TN-ல் போதை பொருள் சப்ளை: விசிக

போதைக்கு எதிராக அனைவரும் கிளர்ந்தெழ வேண்டிய காலம் இது என விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய பண்பாட்டு யுத்தமாக மாறியுள்ளதாக கூறிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தை நோக்கி திட்டமிட்டு போதைப் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது என்றார். மேலும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News January 20, 2026
காங்.-ல் ‘கோட்டா’ பாலிடிக்ஸ்: குமுறும் நிர்வாகிகள்

TN காங்.,-ன் <<18894402>>71 மாவட்ட தலைவர்கள்<<>> பட்டியல் கட்சிக்குள் புயலை கிளப்பியுள்ளது. ‘கோட்டா’ சிஸ்டத்தை ஒழிக்க நினைத்த ராகுல், ஒரு குழுவை அனுப்பி, நேர்காணல் நடத்தியுள்ளார். ஆனால், வெளியான பட்டியலை பார்த்து சில நிர்வாகிகள் அதிர்ந்துள்ளனராம். சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி என பல மாவட்டங்களில், முக்கிய தலைவர்களின் சிபாரிசு ‘கோட்டா’ சிஸ்டத்தில் தான் பதவி வழங்கியுள்ளனர் என அவர்கள் குமறுவதாக கூறப்படுகிறது.


