News March 29, 2024
சிஏஏ குறித்து இதுவரை ராகுல் ஒருவார்த்தை கூட பேசவில்லை

சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி பல நாள்களாகி விட்டநிலையில், அதுகுறித்து ராகுல் காந்தி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “சிஏஏ சட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட ராகுல் தனது இந்திய நீதி யாத்திரையில் பேசவில்லை. சட்டம் அமலாகி பல நாள்களாகியும் அவர் வாய்திறக்கவில்லை. கார்கேவும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.
Similar News
News November 7, 2025
உங்கள் குழந்தை கெட்ட வார்த்தை பேசாம இருக்கணுமா?

➤குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே பெற்றோர் அதை கண்டித்து, திருத்த வேண்டும் ➤அந்த வார்த்தைகளை பேசுவது அவர்களுடைய மதிப்பை குறைக்கும் என எடுத்துரையுங்கள் ➤அவர்கள் முன் நீங்கள் கெட்ட வார்த்தையை பேசாதீங்க ➤தவறுதலாக கெட்ட வார்த்தை பேசினால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அவர்களை கண்டிக்கும்போது கோபப்பட வேண்டாம். SHARE.
News November 7, 2025
வைகோவின் மனதை புண்படுத்த விரும்பவில்லை: OPS

2011-ல் அதிமுக கூட்டணிக்கு மதிமுக வராது என ஜெயலலிதாவிடம் OPS பொய் சொன்னதாக <<18224098>>வைகோ குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாக OPS விளக்கம் அளித்துள்ளார். மேலும், வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அது பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

பிக்பாஸ் 9-வது சீசனில் இதுவரை டபுள் எவிக்சன் நடக்கவில்லை. இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்த வாக்குகளை பெற்ற ரம்யாவும் துஷாரும் எவிக்சன் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே பிக்பாஸ் வீட்டில் பெரியளவில் ஆக்டிவாக இல்லை. அதனால், இவர்களை வெளியேற்றியது சுவாரஸ்யத்தை குறைக்காது என பிக்பாஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


