News March 26, 2024
இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கு இதுவரை 628 ஆண்கள், 109 பெண்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 405 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால் மேலும் பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News November 5, 2025
40 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரஜினி -கமல் கூட்டணி

ரஜினிகாந்த் நடிப்பில் சுந்தர் சி இயக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 2027 பொங்கலை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹிட் படமான ‘அருணாச்சலம்’ படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் – சுந்தர் சி கூட்டணி இணைகிறது. கடைசியாக 1985-ல் ஹிந்தியில் வெளியான கிராப்தார் படத்தில் கமலும் ரஜினியும் இணைந்து நடித்திருந்தனர்.
News November 5, 2025
கணவன் – மனைவி சண்டையை தவிர்க்கணுமா? இத பண்ணுங்க

தம்பதியர்களுக்குள் அன்னியோன்னியம் மேம்பட வேண்டும் என்றால் பரஸ்பர அன்பு, நம்பிக்கை தேவை. எல்லாம் சரியாக தான் இருக்கிறது, சரியாகத் தான் நடந்து கொள்கிறேன்… ஆனால் எங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று கவலைக் கொள்பவரா நீங்கள்? வாழ்க்கைத் துணையின் மனதை கவர என்னென்ன விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை மேலே உள்ள போட்டோக்களில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களும் ஐடியா கொடுக்கலாமே.
News November 5, 2025
நவம்பர் மாதமும் 3 கிரிக்கெட் லெஜண்ட்களும்

இந்தியாவின் பேட்டிங் சூப்பர் ஸ்டார்களான கவாஸ்கர், விராட் கோலி, சச்சின் ஆகிய மூவருமே WC வென்றவர்கள் தான். அதற்கு மேல் அவர்களுக்கும் நவம்பர் மாதத்துக்கும் ஒரு சுவாரஸ்ய கனெக்ஷன் உள்ளது. கவாஸ்கர் ODI-யில் இருந்து நவ.5, 1987-ல் ஓய்வுபெற்றார். 1988-ல் இதே நாளில் விராட் கோலி பிறந்தார். அடுத்த ஆண்டு விராட் பர்த் டேவுக்கு 10 நாள்கள் கழித்து (நவ.15, 1989) சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் களமிறங்கினார்.


