News April 25, 2024
ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டும்

திமுக ஆட்சியில் போதைப்பழக்கம், வெடிகுண்டு கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்டவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக கூறிய அவர், மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதாக சாடினார். மேலும், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும் அவர் வலியுறுத்தினார்.
Similar News
News September 23, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 23, புரட்டாசி 7 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை:12:00 PM – 1:30 PM ▶திதி: துவிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News September 23, 2025
திமுகவின் சமூகநீதி துரோகம் தொடர்கிறது: அன்புமணி

கர்நாடகத்தில் 2-வது முறையாக நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பை குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் மட்டும் சமூகநீதிக்கு எதிரான திமுகவின் துரோகம் தொடர்வதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். DMK அரசின் துரோகத்தை மக்கள் இனியும் மன்னிக்க தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் தடையில்லை என கூறிய அவர் ஆட்சியாளர்களின் சமூக அநீதி மனநிலை மட்டுமே தடையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News September 23, 2025
இந்தியா – மொராக்கோ இடையே புதிய ஒப்பந்தங்கள்

2 நாள் அரசு முறை பயணமாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மொராக்கோவிற்கு சென்றுள்ளார். அங்கு, பயங்கரவாத எதிர்ப்பு, கடற்சார் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு, ராணுவ மருத்துவம், பயிற்சி மற்றும் தொழில்துறை கூட்டாண்மை ஆகிய துறைகளில், இரு நாட்டு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிகழ்வில், ராஜ்நாத் சிங் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சரும் கையெழுத்திட்டனர்.