News March 23, 2024
கனவால் தூக்கம் தொலைகிறதா?

சில கனவுகள் நம்மை புன்னகையோடு எழ வைத்தாலும், சில கனவுகள் திகிலூட்டி அழ வைக்கும். இதற்கு, தூங்கச் செல்லும் முன் நமது ஆழ்மனத்தில் தோன்றும் எண்ணங்களும், தீவிரமாக ஆலோசிக்கும் எதிர்மறை விஷயங்களும் காரணமாக கூறப்படுகின்றது. குறிப்பாக கனவில் அடிக்கடி பாம்பு, பேய் வருவது, சண்டையிடுவது போன்றவை நமது தூக்கத்தை கலைத்தாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
அடைமொழிகளில் நம்பிக்கை இல்லை: அஜித்

பத்ம விருதுக்கு ஜனாதிபதி முர்மு, PM மோடி மற்றும் ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்தார். மேலும், எனக்கு அடைமொழிகளில் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. நான் என்னை அஜித் அல்லது ஏகே என குறிப்பிட விரும்புகிறேன் எனக் கூறிய அவர், நடிப்பு, கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பல்வேறு விஷயங்களை நான் செய்வதற்கு என் நண்பர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.
News April 29, 2025
பாதுகாப்பு படைக்கு முழுச் சுதந்திரம்: PM மோடி அறிவிப்பு

தேவையான பதிலடி, அதற்கான தகுந்த நேரம் உள்ளிட்டவைகளுக்கு ராணுவத்திற்கு முழுச் சுதந்திரம் உள்ளதாக PM மோடி கூறியுள்ளார். மோடியின் இல்லத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர், முப்படை தலைமை தளபதி, தலைமை ஆலோசகர் ஆகியோருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதனைக் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும், இந்தியர்களின் ரத்தம் கொதிப்படைந்துள்ளதாகவும் PM தெரிவித்திருந்தார்.
News April 29, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி & கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று IMD அறிவித்துள்ளது. மேலும், வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.