News October 9, 2025
இந்தியாவில் EV காரை அறிமுகம் செய்யும் Skoda

Skoda நிறுவனம், இந்தியாவில் 2027-28 ஆண்டில் அதன் EV கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்குள் இந்தியாவில் EV கார்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்பு மேம்படும் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், உள்ளூர்மயமாக்கப்பட்ட சப்ளையர் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. Skoda நிறுவனம் வெளிநாடுகளில் பிரீமியம் ரக EV கார்களை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 9, 2025
ரேஷன் கார்டுகளுக்கு தீபாவளி பரிசு: அரசு அறிவிப்பு

புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, இலவச மளிகைத் தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய ₹570 மதிப்பிலான தொகுப்பு வழங்கப்படும் என CM ரங்கசாமி தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் அறிவிப்பு வெளியாகுமா?
News October 9, 2025
CETA ஒப்பந்தத்தால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்: PM

மும்பையில் பிரிட்டன் PM கீர் ஸ்டார்மர் மற்றும் PM மோடி தலைமையில் அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. பின்னர் பேசிய PM மோடி, கீர் ஸ்டார்மர் தலைமையில் இந்தியா- பிரிட்டன் உறவில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியாவும், இங்கிலாந்தும் இயற்கையான நட்பு நாடுகள் என்றும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின்படி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் எனவும் கூறியுள்ளார்.
News October 9, 2025
ராணாவை தேர்வு செய்தது ஏன்? அஸ்வின்

ஆஸி.,க்கு எதிரான தொடரில் <<17930539>>ஹர்ஷித் ராணா<<>> தேர்வு செய்யப்பட்டதற்கு அஸ்வின் ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ராணா தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிய ஆவலாக இருக்கிறேன். ஆஸி., மண்ணில் ஒரு வேகப்பந்து வீச்சாளர், ஒரு பேட்ஸ்மேனாகவும் இருக்க வேண்டும் என்பதால், அவர் அணியில் இடம்பிடித்திருப்பார் என நினைக்கிறேன். ஆனால், அவரது பேட்டிங் திறனில் நம்பிக்கை இல்லை என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.