News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News December 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

News December 31, 2025

சாதனை படைத்த இந்திய மகளிர்

image

SL மகளிருக்கு எதிரான 5-வது டி20-ல் 68 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை(POM) ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். இதன்மூலம் டி20-ல் அதிக முறை POM வென்ற IND வீராங்கனை மிதாலி ராஜின்(12) சாதனையை அவர் சமன் செய்தார். 241 ரன்கள் குவித்த ஷபாலி வர்மாவும், அதிக முறை தொடர்நாயகி விருது வென்ற IND வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்துள்ளார். அனைவரும் 4 முறை POS வென்றுள்ளனர்.

News December 31, 2025

தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

image

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!