News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News November 8, 2025

மாதம் மாதம் ₹11,000 கிடைக்கும் அசத்தல் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் மாதம் ₹11,000 வரை வழங்குகிறது. இத்திட்டத்தில், ₹15 லட்சத்தை முதலீடு செய்தால், 8.2% வட்டி விகிதத்தில் ஆண்டுக்கு ₹1,23,000 வட்டியாக கிடைக்கும். இதை 12 மாதங்களாகப் பிரித்தால், ஒவ்வொரு மாதமும் சுமார் ₹11,750 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம். அருகில் இருக்கு போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.

News November 8, 2025

விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய்யின் நேரடி கண்காணிப்பில் ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வார் ரூம் மூலம் தவெக மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளின் பணிகளை தினமும் விஜய் நேரடியாகவே கண்காணிப்பார் என்றும் மண்டல பொறுப்பாளர்கள் விஜய்க்கு நேரடியாக ரிப்போர்ட் செய்யும் வகையிலும் வார் ரூம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News November 8, 2025

நடிகை கௌரி கிஷனிடம் மன்னிப்பு கேட்டார்

image

நடிகை கௌரி கிஷனை உருவக்கேலி செய்த குற்றச்சாட்டில் யூடியூபர் கார்த்திக் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் எழுப்பிய கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், காயப்பட்டிருந்தால் Sorry எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், ‘தன்னுடைய கேள்வி தவறு’ என கூறாமல் இன்னமும் ‘தவறாக புரிந்துகொள்ளப்பட்டது’ என யூடியூபர் கூறுவதால் சரியான முறையில் மன்னிப்பு கேட்கவில்லை என பலரும் சாடி வருகின்றனர்.

error: Content is protected !!