News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.
Similar News
News December 17, 2025
முன்பதிவிலேயே ₹100 கோடி அள்ளிய அவதார்!

வரும் 19-ம் தேதி ரிலீசாகவுள்ள ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: Fire and Ash’ படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் இரு பாகங்களும் மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்த நிலையில், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். உலகளவில் தற்போது வரை, இப்படம் முன்பதிவில் ₹100 கோடியும், இதில் இந்தியாவில் மட்டும் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
மாணவன் உயிரிழப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

<<18580609>>திருவள்ளூர்<<>> பள்ளி மாணவன் உயிரிழப்பு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். அதில், பள்ளியில் அஜாக்கிரதையாக செயல்பட்டவர்கள் குற்றம் செய்ததாகத்தான் அர்த்தம் என்று குறிப்பிட்டுள்ளார். FIR பதிவு செய்துள்ளதாக கூறிய அவர், நிதியுதவி மட்டுமின்றி குடும்பத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார். CM இதுபற்றி விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
News December 17, 2025
520 பெண்களுடன் கணவர்.. மனைவியின் விநோத செயல்!

ஜப்பான் பெண்ணுக்கு, அரிய வகை நோயுடன் மகன் பிறக்க, கணவன் துணையுடன் அதை வெல்ல நினைக்கிறார். அப்போது தான், கணவர் 520 பெண்களுடன் முறை தவறி பழகி வருவது தெரியவருகிறது. முதலில் பழிவாங்க எண்ணினாலும், மகனின் நிலை கண்டு நூதன முடிவை எடுத்தார். கணவனை பிரிந்து, அவரின் முறையற்ற உறவுகளை Comics புக்காக வெளியிட்டுள்ளார். இதன்மூலம் கோபத்தை தணித்து கொண்டது மட்டுமின்றி, மகன் சிகிச்சைக்கும் பணம் சேர்த்துள்ளார்.


