News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News November 21, 2025

குளிர்காலத்தில் நரம்பை பலப்படுத்தும் பெஸ்ட் உணவுகள்

image

* ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு, ஸ்டிராபெர்ரி, திராட்சை, ப்ளம்ஸ் ஆகிய குறைந்த கலோரி மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ள பழங்களை எடுத்துக் கொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
*முந்திரி, பாதாம், வால்நட் ஆகிய வைட்டமின் பி நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகள் ஆகியவற்றை தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளலாமாம்.
*அசைவ உணவுகள் பொருத்தவரையில் ஒமேகா 3 கொழுப்பு நிறைந்த மீன் வகைகள் சிறந்ததாம்.

News November 21, 2025

CINEMA 360°: ‘அமரன்’ படத்துக்கு சிறப்பு கௌரவம்

image

*50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி மீண்டும் ‘SHOLAY’ படம் வெளியாகிறது. *’டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவின்ந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் டைட்டில் டீசரை இன்று ரஜினிகாந்த் வெளியிட உள்ளார். *கவினின் ‘மாஸ்க்’ படத்தின் 4-வது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. * 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பனோரமா பிரிவின் கீழ் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ திரையிடப்படுகின்றது.

News November 21, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 526
▶குறள்:
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
▶பொருள்: பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

error: Content is protected !!