News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.
Similar News
News March 27, 2025
அமேசான், பிளிப்கார்ட்டில் இவ்வளவு தரமற்ற பொருட்களா?

முன்னணி ஈ- காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் குடோன்களில் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் சோதனை நடத்தியது. சென்னை, டெல்லி போன்ற இடங்களில் உள்ள குடோன்களில் நடந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட ₹76 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது.
News March 27, 2025
மனிதர்களை கொல்லும் உலகின் ஆபத்தான பழங்குடி மக்கள்!

‘முர்சி’ பழங்குடியினம் தான் உலகின் மிகவும் ஆபத்தான பழங்குடியினம். தெற்கு எத்தியோப்பியா மற்றும் சூடானில் வசிக்கும் இவர்கள், கொலை செய்வது ஆண்மையின் அடையாளமாக கருதப்படுகிறார்கள் என்கின்றனர். இந்த இனப் பெண்கள், தங்களின் கீழ் உதட்டில் களிமண் வட்டு செருகி கொள்கின்றனர். இந்த பழங்குடியினத்தினர், இதுவரை நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ளதால், எத்தியோப்பிய அரசு அவர்களுடன் தொடர்பு கொள்ள தடை விதித்துள்ளது.
News March 27, 2025
கோர விபத்தில் 3 பேர் பலி

கவுஹாத்தியில் இன்று மாலை ஏற்பட்ட கோர விபத்தில், சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சோனாப்பூர் பகுதியில் மூன்று சக்கர வாகனம் டிரக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில், மூன்று சக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். சாலையோரம் பல வாகனங்கள் அனுமதியின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.