News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News November 25, 2025

உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி: H ராஜா

image

திராவிட மாடல் அரசு என்றாலே திருட்டு, இருட்டு, புரட்டு, உருட்டு என்றே அர்த்தம் என H ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களில் திமுக அரசு சொல்வது அனைத்தும் முழு பொய் என்று சாடிய அவர், திமுகவை தான் நம்பவே மாட்டேன் என்றும் கூறினார். SIR பணிகளால் எந்த ஊழியரும் மன உளைச்சலில் இறக்கவில்லை என்றார். மேலும், உதயநிதி ஒரு இந்து விரோத சக்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.

News November 25, 2025

கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

image

நாளை புயல் உருவாகவுள்ள நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு விடுமுறை இல்லாவிடில், குடை, ரெயின் கோட் ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள் மாணவர்களே..

News November 25, 2025

நள்ளிரவில் பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்: பிரேமலதா

image

யாரையும் நம்பாமல், நள்ளிரவில் தனிமையான இடத்திற்கு செல்ல வேண்டாம் என்று பெண்களுக்கு பிரேமலதா அறிவுறுத்தியுள்ளார். அரசு, பெற்றோர், போலீஸ் என எல்லாரும் 24 மணிநேரமும் நம்மை பாதுகாக்க மாட்டார்கள் என்றும் கூறிய அவர், நாம் தான் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அங்கு பரப்புரை செய்கையில் இவ்வாறு பிரேமலதா பேசினார்.

error: Content is protected !!