News March 26, 2025
உருவம் தவிர்; உள்ளத்தை பார்

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.
Similar News
News January 16, 2026
தாக்கரே சகோதரர்களுக்கு ‘ரசமலாய்’ அனுப்பிய பாஜக

மும்பை மாநகராட்சி தேர்தலில் <<18872687>>’மஹாயுதி’<<>> கூட்டணி 120-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், பாஜக தலைவர் தஜிந்தர் பக்கா, உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே, ஆதித்ய தாக்கரேவுக்கு ஆன்லைனில் ‘ரசமலாய்’ ஆர்டர் செய்து அனுப்பியுள்ளார். அண்ணாமலையை <<18833309>>ரசமலாய்<<>> என ராஜ் தாக்கரே விமர்சித்திருந்த நிலையில், பதிலடி கொடுக்கும் விதமாக ‘இந்த இனிப்பை நீங்கள் ரசிப்பீர்கள்’ எனக்கூறி அனுப்பி வைத்துள்ளார்.
News January 16, 2026
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

₹1,000 மகளிர் உரிமைத் தொகை விரைவில் உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பொங்கலுக்குள் மகளிருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் ஐ.பெரியசாமியும் கூறியிருந்தார். 2 நாள்கள் பொங்கல் விடுமுறை முடிந்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் CM, இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 16, 2026
நீரிழிவு நோயாளிகள் இதை செய்யலாமா?

குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சாப்பிடுவதை ‘இடைப்பட்ட விரதம்’ என்று அழைக்கின்றனர். நீரிழிவு நோயாளிகள் இந்த விரதத்தை பின்பற்றுவது உயிருக்கே ஆபத்து என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, ஒரே நேரத்தில் அதிகளவு சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். குறிப்பாக இன்சுலின் எடுத்துக் கொள்பவர்கள் இந்த ரிஸ்க்கை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.


