News May 18, 2024

சிக்சர் மழை: RCB புதிய சாதனை

image

CSK-க்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில், RCB அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் RCB அணி, நாலாபக்கமும் சிக்சர் மழையை பொழிந்து வருகிறது. இதனால் ஒரு ஐபிஎல் சீசனில் 150 சிக்சர்களை பறக்க விட்ட முதல் அணி என்ற புதிய சாதனையை RCB அணி படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு அணியும் 150 சிக்சர்கள் அடித்ததில்லை. SRH- 146, DC- 135, MI- 133 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Similar News

News March 10, 2026

ஈரான் புதிய உயர் தலைவர் மீது டிரம்ப் அதிருப்தி!

image

மறைந்த அயதுல்லா கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உயர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இஸ்ரேல் மீதான தாக்குதலை ஈரான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மொஜ்தபா கமேனியை தேர்ந்தெடுத்து, ஈரான் மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக டிரம்ப் எச்சரித்துள்ளார். அடுத்த கமேனியை கொல்வதை விட, தான் ஈரானின் அடுத்த உயர் தலைவரை தேர்ந்தெடுக்கவே விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 10, 2026

மார்ச் 10: வரலாற்றில் இன்று

image

*1922 – பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு பம்பாயில் காந்தியடிகள் கைது செய்யப்பட்டார். *1948 – இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மதராஸில் தொடங்கப்பட்டது. *1933 – பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்த தினம். *1980 – திரைப்படப் பாடலாசிரியர் மதன் கார்க்கி பிறந்த தினம். *1897 – இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே நினைவு தினம்.

News March 10, 2026

இலங்கை அணியின் கோச் ஆனார் கேரி கிர்ஸ்டன்

image

டி20 WC தொடரில் இலங்கை அணியின் படுதோல்வியை அடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகினார். இதையடுத்து அந்த அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்கு 2011 இல் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேரி கிர்ஸ்டன், 2 ஆண்டுகாலத்திற்கு வரும் ஏப்ரல் 14, 2028 வரை தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

error: Content is protected !!